மேலும் அறிய

ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!

நாகப்பட்டினத்தில் வரும் ஜூலை 24 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைய தினம் 24.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 24-ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் நாகப்பட்டினம் மாவட்டம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரில் பங்கேற்கின்றன. அந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம்.

கல்வித் தகுதி: 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயப்படிப்பு (Diploma), ஐ.டி.ஐ (ITI), பி.இ (B.E.) மற்றும் பிற பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான பணி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்

வேலைவாய்ப்பு மட்டுமன்றி, இம்முகாமில் பங்குபெறும் இளைஞர்களுக்குப் பல்வேறு கூடுதல் வழிகாட்டுதல்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

* இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Development Training) குறித்த தகவல்கள்.

* சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிக் கடன் வசதி பெறுவதற்கான ஆலோசனைகள்.

* அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்கள்.

"நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யும் முறை

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் தங்களது;

1. சுயவிவர அறிக்கை (Resume / Bio-data)

2. கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்

3. அடையாளச் சான்று (ஆதார் அட்டை)

4. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

5. முன்அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்கள்

ஆகியவற்றுடன் நேரில் வருகை தர வேண்டும். மேலும், இதில் பங்கேற்க விரும்பும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதலாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்குத் தொலைபேசி எண்: 04365-252701 என்ற எண்ணில் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர் புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர் அனைவரும் இந்த மெகா வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
இந்தியன் ஆயில்: 1450 அப்ரண்டீஸ் காலியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இந்தியன் ஆயில்: 1450 அப்ரண்டீஸ் காலியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
500 பணியிடங்கள்:  உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! எங்கே தெரியுங்களா?
500 பணியிடங்கள்:  உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! எங்கே தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Embed widget