மேலும் அறிய

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை - குறையாத குறைகளும் குவியும் மனுக்களும்...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 393 மனுக்கள் குவிந்துள்ளது.

மயிலாடுதுறை: "ஆட்சிகள் மாறினாலும், அடித்தட்டு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளும், அவர்கள் அதிகாரிகளை நோக்கி ஏந்தி வரும் மனுக்களின் எண்ணிக்கையும் மாறுவதே இல்லை" என்பதை நிரூபிக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அமைந்திருந்தது. அரசுத் துறைகள் எத்தனையோ டிஜிட்டல் மயமாகிவிட்டதாகக் கூறப்பட்டாலும், தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக மாவட்டத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் சாமானிய மக்கள் இன்றும் ஆட்சியர் அலுவலக வாசலில் தவம் கிடக்கும் காட்சியே அரங்கேறியது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று (06.07.2026) மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் நீண்ட நாள் குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி நீண்ட நேரம் காத்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.

குவியும் மனுக்கள்: ஒரு புள்ளிவிவரப் பார்வை

இன்றைய கூட்டத்தில் மட்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 393 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. துறை வாரியாகப் பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள், மக்களின் தீர்க்கப்படாத அன்றாடப் பிரச்சினைகளை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டின..

கலைஞர் உரிமைத்தொகை: தங்களுக்கு இன்னும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், தகுதியிருந்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, மிக அதிகபட்சமாக 145 பெண்கள் மனு அளித்துள்ளனர்.

அடிப்படை வசதிகள்: குடிநீர், சாலை, தெருவிளக்கு, வடிகால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கோரி 56 மனுக்கள் வந்துள்ளன.

பல்வேறு புகார்கள்: அரசு மற்றும் தனியார் துறைகள் சார்ந்த பல்வேறு புகார்கள் தொடர்பாக 43 மனுக்கள் பெறப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றம்: பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 34 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

வீட்டுமனை பட்டா மற்றும் மாறுதல்: ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 32 மனுக்கள் பெறப்பட்டன.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை வேண்டி 31 மனுக்கள் குவிந்தன.

நிலப் பிரச்சினைகள்: நில அபகரிப்பு மற்றும் குடும்ப நிலத் தகராறுகள் தொடர்பாக 21 மனுக்கள் பதிவாகின.

மாற்றுத்திறனாளிகள் நலன்: அடையாள அட்டை, மாத உதவித்தொகை, வங்கிக் கடன் மற்றும் உபகரணங்கள் கோரி 16 மனுக்கள் அளிக்கப்பட்டன.

வேலைவாய்ப்பு: படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி 15 மனுக்கள் வழங்கினர்.

உடனடி நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஒவ்வொரு மனுவையும் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக ஒப்படைத்தார். மேலும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகையில், "பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தீர்க்கக் கோரி நம்பிக்கையோடு ஆட்சியரகத்தை நாடுகின்றனர். எனவே, இந்த மனுக்கள் மீது எவ்விதத் தொய்வும் இன்றி, உரிய காலத்திற்குள் சட்டப்பூர்வமான விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான விவரங்களை மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ கட்டாயம் தெரிவிக்க வேண்டும்," என மிகக் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச் சான்றிதழ்கள்

இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. மத்திய அரசின் தேசிய அறக்கட்டளை வாயிலாக, சுயசார்பற்ற நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளான புறவுலக சிந்தனையற்றோர் (Autism), மனவளர்ச்சி குன்றியவர்கள் (Intellectual Disability), மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் (Cerebral Palsy) மற்றும் பல்வகை மாற்றுத்திறன் (Multiple Disabilities) கொண்டவர்களுக்குப் பாதுகாவலர்களை நியமிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நேஷனல் டிரஸ்ட் சட்டத்தின் கீழ் (Local Level Committee) ஆணைப்படி, மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இந்தச் சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்றைய கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் 05 மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாவலர் நியமனச் சான்றுகளை நேரடியாக வழங்கினார். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.

பங்கேற்ற அதிகாரிகள்

இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் முதன்மை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

"மனுக்கள் வாங்குவதோடு கடமை முடிந்துவிடாமல், கள அளவில் அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது."

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
Mayiladuthurai Power Shutdown (16.07.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் பவர்கட் - முழு விபரம்!
Mayiladuthurai Power Shutdown (16.07.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் பவர்கட் - முழு விபரம்!
"அரசு அதிகாரிக்கே இந்த நிலையா? மயிலாடுதுறையில் பெண் DRO-வுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!" 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Embed widget