மேலும் அறிய

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை மாவட்டம் - ஆட்சியரின் அதிரடி உத்தரவுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அதில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் இந்த பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலை

கூட்டத்தில், பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், அவசர காலங்களில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக விளக்கினார். ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் செல்லும் கால்வாய்களின் கரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக அடைப்பதற்குத் தேவையான மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க, போதுமான புல்டோசர்கள், ஜேசிபி இயந்திரங்கள், பவர்சா மற்றும் டிராக்டர்கள் போன்ற உபகரணங்களை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் அவசரகாலத் தேவைக்காக, ஜேசிபி மற்றும் டிராக்டர் உரிமையாளர்களின் தொலைபேசி எண்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் கேட்டுக் கொண்டார்.

சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள்

பருவமழை காலத்தில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மலேரியா, காலரா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு, காய்ச்சிய குடிநீரைக் குடிக்குமாறு ஒலிபெருக்கிகள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் சுகாதாரக் குடும்ப நல துணை இயக்குநர், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மழைக்காலம் முழுவதும் உயிர்காக்கும் மருந்துகளைப் போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு

பருவமழைக் காலத்தில் எந்தவொரு இடர்பாடுகளையும் திறம்பட எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை, மற்றும் முக்கிய அரசுத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் கூறினார். இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின் போது சீரிய முறையில் செயல்படுவதற்கு, அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் முன்தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முக்கிய அரசு அலுவலகங்களில் ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர், புல்டோசர், ஜேசிபி, மரம் அறுக்கும் கருவி போன்ற கனரக வாகனங்களை தயார் நிலையில் வைத்து, 24x7 நேரமும் பணியாற்றுவதற்குத் தேவையான ஊழியர்களை நியமித்து, அதன் விவரங்களை பேரிடர் மேலாண்மைப் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு மற்றும் நிவாரணப் பணிகள்

மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்க தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். மேலும், தேவையான மருந்துகளைப் போதிய அளவில் இருப்பு வைத்திருக்கவும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவசர காலத்தில் தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்ல தயார் நிலையில் வைத்திருக்கவும் வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறைக்கு அறிவுறுத்தினார்.

கடந்த கால அனுபவங்கள் 

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, புயல் அல்லது வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். மேலும், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இணைந்து ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, அதன் நடவடிக்கை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் நலினா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நாகையில் ஒரே நாளில் 446 மனுக்கள் குவியக் காரணம் என்ன? மக்களின் முக்கியத் தேவைகள் என்னென்ன?
நாகையில் ஒரே நாளில் 446 மனுக்கள் குவியக் காரணம் என்ன? மக்களின் முக்கியத் தேவைகள் என்னென்ன?
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
ஆபீஸை பூட்டிவிட்டு கிராமங்களுக்கு படையெடுக்கும் அதிகாரிகள்: மயிலாடுதுறையில் ஜூலை 15-ல் நடக்கப் போவது என்ன?
ஆபீஸை பூட்டிவிட்டு கிராமங்களுக்கு படையெடுக்கும் அதிகாரிகள்: மயிலாடுதுறையில் ஜூலை 15-ல் நடக்கப் போவது என்ன?
தீராத மக்கள் பிரச்சினைகள்.. குவியும் மனுக்கள்: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பான திங்கட்கிழமை!
தீராத மக்கள் பிரச்சினைகள்.. குவியும் மனுக்கள்: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பான திங்கட்கிழமை!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget