Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
’லயோலா மணி நியமனத்திற்கு மட்டமான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முன் வைக்கிறார்கள் என்றால் அதற்கு தகுதி மட்டுமே காரணமா? அல்லது தங்களுக்கெல்லாம் இப்படியான பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமா?

தவெக நிர்வாகி லயோலா மணியை அரசு பாடநூல் கழகத் தலைவராக நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அவர் மீது சமூக வலைதளங்களில் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
தவெக-விற்கு உழைத்த லயோலா மணி
தவெக ஆட்சி அமைவதற்கு உழைத்தவர்களில் முக்கிய பங்கு லயோலா மணிக்கு உண்டு. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஏன் களத்திலும் லயோலா மணி ஆற்றிய பணி மறுக்கவோ மறைக்கவோ முடியாதது. தவெக-வில் பெயர் தெரியாதவர்கள் பலருக்கு எம்.எல்.ஏ சீட், வெற்றி பெற்றதும் அமைச்சர் என்ற அந்தஸ்தை அந்த கட்சியின் தலைவர் விஜய் கொடுத்திருக்கும் நிலையில், யார், யாருக்கோ எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய், பல விவாதங்களில் பங்கேற்று தவெக-வை முன்னிறுத்திய லயோலா மணிக்கு ஏன் எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்ற கேள்வி அப்போதே எழுந்திருந்தது.
கு.ப.கிருஷ்ணன் முதல் வெங்கட்நாராயணா வரை
ஆட்சி அமைந்ததும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த கு.ப.கிருஷ்ணனுக்கு வீட்டு வசதி வாரியத் தலைவர், தன்னுடைய ஜோதிடருக்கு OSD, ஜான் ஆரோக்கியசாமிக்கும், விஷ்ணு ரெட்டிக்கும் அரசியல் ஆலோசகர் பதவி, ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட்நாராயாணாவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என பதவிகளை வாரிக் கொடுத்தார் முதல்வர் விஜய். அந்த வரிசையில் லயோலா மணிக்கும் உடனடியாக பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் கழித்து அவருக்கு அரசு பதவி வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
— Duraimurugan (@Saattaidurai) July 13, 2026
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .… pic.twitter.com/QiHyUaKdwH
காக்கா பிரியாணி டயலாக்கை சொல்லி விமர்சனம் செய்யும் நா.த.க-வினர்
இந்நிலையில், லயோலா மணிக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதை திமுகவினரை காட்டிலும் நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட அந்த கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே ‘காக்கா பிரியாணி’ டயலாக்கெல்லாம் சொல்லி லயோலா மணிக்கு பதவி கொடுத்ததை விமர்சித்திருக்கிறார்கள்.
"தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து" எனக் கூறி, தீண்டாமையை ஒழித்தவர் தளபதி விஜய்.
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) July 13, 2026
"இங்கிலிபீசு வேணான்டி
ஹிந்தி சிரிப்பு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி" எனப் பாடி இந்தித்திணிப்பை எதிர்த்தவர் தளபதி விஜய்.
மேற்கண்டவை இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில்… pic.twitter.com/AqTP345oht
திண்டுக்கல் லியோனியும், வளர்மதியும் வானத்தில் இருந்து குதித்தவர்களா ?
கடந்த திமுக ஆட்சியில் திண்டுக்கல் லியோனி, அதற்கு முன்னரான அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டபோதெல்லாம் எழாத விமர்சனங்கள் லயோலா மணி நியமனத்தின்போது மட்டும் எழுந்திருக்கிறதென்றால், அதற்கு தகுதி மட்டும்தான் காரணமா? அல்லது லயோலா மணிக்கெல்லாம் அரசு பதவி கிடைத்துவிட்டதே என்ற ஆதங்கமா? என்பது புரியாத புதிராகவே உள்ளது என்கிறார்கள் தவெகவினர்
பாடநூல் கழகத் தலைவர் பதவி என்பது மெத்த படித்தவர்கள், மேதாவிகளுக்குதான் கொடுக்கப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கல்விக்கான முக்கியத்துவம் தெரிந்த, தமிழ்நாடு மாணவர்களின் நிலையை தெரிந்த யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவியை கொடுக்கலாம். கடந்த காலங்களிலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் எழாத விமர்சனம், லயோலா மணியை நியமித்த பின்னர் எழுகிறது என்றால் அதற்கு காரணம் என்னவென்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அரசு பதவி கிடைக்கவில்லையென்ற ஆதங்கமா ?
அதுவும் தமிழரான, தமிழ் தேசிய உணர்வாளரான லயோலா மணி நியமிக்கப்பட்டதற்கு காக்கா பிரியாணி வரை ஒப்பீடு செய்து நாம் தமிழர் கட்சியினர் விமர்சிக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம், தங்களால் அரசு பதவியை பெற முடியவில்லை என்ற ஆற்றாமைதான் என்கிறார்கள் லயோலா மணியின் ஆதரவாளர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















