மேலும் அறிய

தீராத மக்கள் பிரச்சினைகள்.. குவியும் மனுக்கள்: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பான திங்கட்கிழமை!

மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் கலெக்டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரே நாளில் 480 மனுக்கள் குவிந்துள்ளன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று (13.07.2026) மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நாளுக்கு நாள் பொதுமக்களின் கோரிக்கைகளும், தீர்க்கப்பட வேண்டிய தேவைகளும் அதிகரித்து வருவதை உணர்த்தும் விதமாக, இன்றைய ஒரே நாளில் மட்டும் 480 மனுக்கள்குவிந்தன. விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததால், மாவட்ட ஆட்சியரக வளாகம் பொதுமக்களின் வருகையால் அதிகாலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது.

உரிமைத்தொகை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அலைமோதிய மக்கள்

பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து சமர்ப்பித்த மனுக்களில், அரசு நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த கோரிக்கைகளே பிரதானமாக உற்றுநோக்கப்பட்டன. 

பெறப்பட்ட மனுக்களின் விபரம் வருமாறு

மகளிர் உரிமைத்தொகை (157 மனுக்கள்): கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு விடுபட்ட தொகையை உடனே வழங்கக் கோரி, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து மனுக்களை அளித்தனர்.

அடிப்படை உள்கட்டமைப்பு (69 மனுக்கள்): குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகள், தெருவிளக்கு வசதி மற்றும் மழைக்கால வடிகால் கோரி கிராமப்புற மக்கள் அதிகளவில் மனுக்களை சமர்ப்பித்தனர்.

புகார்கள் மற்றும் இதர கோரிக்கைகள்: சமூகப் பிரச்சினைகள் மற்றும் அண்டை வீட்டார் அத்துமீறல்கள் தொடர்பாக 57 மனுக்கள் வரப்பெற்றன.

ஆக்கிரமிப்பு அகற்றுதல் (46 மனுக்கள்): நீர்நிலைகள் மற்றும் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் முறையிட்டனர்.

வீட்டுமனை & பட்டா (42 மனுக்கள்): ஏழை எளிய மக்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (41 மனுக்கள்): முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை வேண்டி ஆதரவற்ற முதியவர்கள் மனு அளித்தனர்.

நிலப் பிரச்சினைகள் (26 மனுக்கள்): நில அபகரிப்பு மற்றும் குடும்பப் பாகப்பிரிவினை தொடர்பான புகார்கள் அளிக்கப்படன.

மாற்றுத்திறனாளிகள் நலன் & வேலைவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து 21 மனுக்களும், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு வேண்டி பட்டதாரி இளைஞர்களால் 21 மனுக்களும் வழங்கப்பட்டன.

அதிகரிக்கும் மனுக்கள்: மாவட்ட ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவு

ஒரே நாளில் மனுக்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  ஒவ்வொரு மனுவையும் தனித்தனியாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினார். பின்னர், அங்கு குழுமியிருந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு  அதிரடி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

"மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களின் தேவையை காட்டுகிறது" "மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது, தரைமட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இன்னும் அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது. எனவே, அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் மனுக்களை அலட்சியப்படுத்தாமல், காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட தற்போதைய நிலை (Status) குறித்து மனுதாரர்களுக்கு உடனடியாக எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்," என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொடர்ந்து மனுக்கள் அதிகரித்து வருவதால், மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செயலி அல்லது தீவிர கண்காணிப்பு முறை அவசியமாகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தீராத மக்கள் பிரச்சினைகள்.. குவியும் மனுக்கள்: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பான திங்கட்கிழமை!
தீராத மக்கள் பிரச்சினைகள்.. குவியும் மனுக்கள்: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பான திங்கட்கிழமை!
"தமிழ்நாட்டுல காலே வைக்க முடியல, இதுல 2031-ல ஆட்சியா?" - அண்ணாமலையை வாரிச் சுருட்டிய எம்பி சுதா!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி... ஏன் தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி... ஏன் தெரியுமா?
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Embed widget