மேலும் அறிய

குடிநீருக்காக போராடிய பொதுமக்கள்..பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல், நெஞ்சுவலி நாடகம் ஆடிய BDO - அதிர்ச்சியி மக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடிநீருக்காக போராடிய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் உப்புநீராக வருவதாகக் கூறி, நல்ல குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திடீரென நெஞ்சுவலி நாடகம் நடத்தி, அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியது.

உப்புநீரால் அவதி

புங்கனூர் கிராமத்தில் பல மாதங்களாகவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மிகவும் மோசமாக, குறிப்பாக உப்புநீராக வருவதால், குடிநீருக்காக மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தரமான குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, புங்கனூர் வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஒன்றியச் செயலாளர் கமல்நாத் மணிவேல் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரி

ஆர்ப்பாட்டம் நடப்பது குறித்து தகவல் அறிந்த சீர்காழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) சரவணன், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள், "பலமுறை கோரிக்கை விடுத்தும் ஏன் இதுவரை நல்ல குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை?" என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தனர். அதிகாரியின் கவனக்குறைவு மற்றும் மெத்தனப் போக்கு குறித்துப் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

திடீர் 'நெஞ்சுவலி' நாடகம்!

பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், எதிர்பாராத விதமாகச் செயல்பட்டார். திடீரென அவர் தனது நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாலையில் சரிந்தார். மேலும், தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி கூச்சலிட்டார். இதைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸை அழைக்கத் தொடங்கினர். ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்துகொண்டிருந்த சிலர், அதிகாரியின் இந்தச் செயலையும் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

வீடியோ எடுக்கப்படுவதைக் கண்டு சுதாரிப்பு

ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும், பொதுமக்கள் தன்னை வீடியோ எடுப்பதைப் பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், திடீரென சுதாகரித்துக் கொண்டார். தனது நாடகத்தின் உண்மைத்தன்மை அம்பலமாவதை உணர்ந்து, ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், "தனது சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைக்குச் செல்வதாக" தெரிவித்தார். உடனடியாக அவர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்குடன் பேச்சுவார்த்தைக்கு வந்த ஓர் அரசு அதிகாரி, மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், போலியாக நெஞ்சுவலிப்பதாகக் கூறிச் சாலையில் விழுந்து கூச்சலிட்டதும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், அவரது இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே நகைப்புக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது. ஓர் அதிகாரி, அடிப்படைப் பொதுப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கப் போலியான நாடகத்தை அரங்கேற்றியது கண்டனத்துக்குரியது எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, புங்கனூர் கிராம மக்களின் நீண்ட நாள் குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும், மேலும் நெஞ்சு வலி நாடகம் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!
ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget