மேலும் அறிய

மயிலாடுதுறை: 7,500 ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம்; நெல் மூட்டைக்கு ₹40 லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் வேங்கடரமணன் அதிரடி!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாகப் பணியாற்றும் 7,500 தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 7,500 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வேங்கடரமணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தீவிர ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

ஆதீன மடாதிபதியுடன் சந்திப்பு: நெல் கிடங்குகளுக்கு நிலம் கோரிக்கை

தனது மாவட்ட ஆய்வின் ஒரு பகுதியாக, அமைச்சர் வேங்கடரமணன் உலகப் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சென்றார். அங்கு தருமபுரம் ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து, மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப் போதிய கிடங்கு வசதிகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், புதிய நவீன நெல் கிடங்குகளை அமைப்பதற்குத் தேவையான நிலங்களை வழங்கிட வேண்டும் என்று ஆதீனத்திடம் கோரிக்கை வைத்தார். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தருமபுரம் ஆதீனம் சார்பில் நான்கு முக்கிய இடங்களில் கிடங்குகள் அமைக்க நிலம் வழங்குவதாக மடாதிபதி உறுதியளித்துள்ளார்.

விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல்: கோரிக்கைகளும் புகார்களும்

இதனைத் தொடர்ந்து, நத்தம் கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் வேங்கடரமணன், அங்குள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து, உள்ளூர் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நடப்பு குறுவை சாகுபடி நிலவரங்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

அமைச்சரிடம் விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு;

வாய்க்கால்களைத் தூர்வாருதல்: பெருமழைக் காலங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்காமல், எளிதாக வடிந்து செல்வதற்கு வசதியாக, தூர்ந்து போயுள்ள பழைய வடிகால் வாய்க்கால்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

நெல் மூட்டைகள் விரைவான கொள்முதல்: கொள்முதல் நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு வசதியின்றித் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளைப் பாழாவதற்கு முன்பாக, உடனடியாக அரிசி ஆலைகளுக்கு (அரவைக்கு) அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், தேங்கிக் கிடக்கும் நெல்மணிகள் வீணாவதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தேவையான கிடங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

7,500 ஊழியர்கள் பணி நிரந்தரம்: முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்லும் பட்டியல்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேங்கடரமணன், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்துப் பேசுகையில்;

"நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல், மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகப் பணியாளர்களாக 7,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான தகுதிப் பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நல்நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும்," என்று உறுதியளித்தார்.

மூட்டைக்கு ரூபாய் 40 லஞ்சம்: முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் அதிரடி உத்தரவு

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டை நெல்லிற்கு 40 ரூபாய் வரை கட்டாயக் கையூட்டு (லஞ்சம்) பெறப்படுவதாக எழுப்பப்பட்ட காரசாரமான கேள்விக்கு அமைச்சர் நேரடியாகப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அரசார்பில் தங்கு தடையின்றிச் செய்து தரப்படும். ஊழியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் அதே வேளையில், விவசாயிகளைத் துன்புறுத்தும் இத்தகைய முறைகேடுகள் எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ளப்படாது. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறும் அவலநிலையை முற்றிலுமாகத் தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முறைகேடுகளை ஒழிக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, "மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்கு தடையின்றி பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்த ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பின் போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், உணவுப்பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மின்னல் தாக்கியவரைத் தொட்டால் நமக்கும் ஷாக் அடிக்குமா? நாகை ஆட்சியர் உடைத்த உடைக்க முடியாத உண்மை!
மின்னல் தாக்கியவரைத் தொட்டால் நமக்கும் ஷாக் அடிக்குமா? நாகை ஆட்சியர் உடைத்த உடைக்க முடியாத உண்மை!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
யார் அந்த 8 பேர்? நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு!
யார் அந்த 8 பேர்? நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
MG PHEV: 1,100KM ரேஞ்ச் 7 சீட்டர் ஜுலை 16ல் அறிமுகம்..! ப்ளக் இன் ஹைப்ரிட் கார் விலை பேட்டரி விவரங்கள் - முழு டீடெய்ல்
1,100KM ரேஞ்ச் 7 சீட்டர் ஜுலை 16ல் அறிமுகம்..! ப்ளக் இன் ஹைப்ரிட் கார் விலை பேட்டரி விவரங்கள் - முழு டீடெய்ல்
Embed widget