மேலும் அறிய

காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சீர்காழிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் சதகத்துல்லா தலைமையிலான 90 பேர் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி 13 வது பட்டாலியனை சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சீர்காழியில் முகாம் இட்டுள்ளனர். 

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை 

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிக தீவிரமடைந்தது. அதன் காரணமாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அதனால் கிருஷ்ணராஜா சாகர் மற்றும் கபினி உள்ளிட்ட அணைகளில் நீர் வழிந்து வருவதினால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.


காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சீர்காழிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு

நிரம்பி வழியும் மேட்டூர் அணை 

அதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சீர்காழிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

காவிரி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி கடலில் வந்து கலக்கும் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று கள ஆய்வு நடத்தினார். அதனை தொடர்ந்து அனைத்து துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டமும் நடைபெற்றுள்ளது.


காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சீர்காழிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு

அதேபோன்று வருவாய் துறையினர், காவல் துறையினர் ஆட்டோ ஒலிபெருக்கியின் மூலம் ஆற்றங்கரை ஓரமாக மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது படகின் மூலமோ செல்ல கூடாது எனவும், தண்ணீர் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.



காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சீர்காழிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு

பேரிடர் மீட்பு குழு 

இந்நிலையில் இன்று மாலை அல்லது இரவுக்குள் காவிரி நீரானது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்து சேரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோர திட்டு கிராம மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சீர்காழி வருகை புரிந்துள்ளனர். ஆவடி 13 வது பட்டாலியனை சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் சதகத்துல்லா தலைமையிலான 90 பேர் சீர்காழி வருகை புரிந்துள்ளனர்.


காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சீர்காழிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு

ரப்பர் மீட்பு படகு, மரம் அறுக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் உள்ளிட்ட 70 மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி உள்ளிட்ட திட்டு கிராமம் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
Embed widget