மேலும் அறிய

இன்ப அதிர்ச்சி! தருமபுரம் ஆதீனத்தின் 'இசைப் புலவர்' விருது பெற்ற இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா நெகிழ்ச்சி..!

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனத்தின் மணிவிழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாக்கு 'இசைப் புலவர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை: தமிழ்ச் சைவத் திருமடங்களில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-வது மணிவிழா மாநாடு நேற்று மாலை மயிலாடுதுறையில் கோலாகலமாகத் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆன்மீக மற்றும் கலை மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில், புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரும் இளையராஜாவின் மகனுமான கார்த்திக் ராஜாவின் இன்னிசை மழை பொழிந்தது. இந்த விழாவில் அவருக்கு 'ஆதீன இசைப் புலவர்' என்ற உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இது தனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்ததாகக் கார்த்திக் ராஜா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மணிவிழா மாநாடு தொடக்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியின் பிரமாண்ட அரங்கத்தில் நடைபெறும் தருமபுரம் ஆதீன கர்த்தரின் மணிவிழா மாநாட்டின் தொடக்க விழா நேற்று மாலை துவங்கியது. இதில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். பல்வேறு ஆன்மீகப் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாலை நடைபெற்ற இன்னிசை கச்சேரியை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அரங்கேற்றினார். ஆன்மீகமும், இசையும் சங்கமித்த இந்த விழாவில், கார்த்திக் ராஜா தனது தேர்ந்த இசை ஞானத்தால் அனைவரையும் கட்டிப்போட்டார்.

பக்திப் பாடல்களும், உருக்கமான கீதங்களும்!

கச்சேரியை 'ஜகம் நீ ஜனனி' என்ற பக்திப் பாடலுடன் துவக்கிய கார்த்திக் ராஜா, தொடர்ந்து பல மனதை உருக்கும் திரைப்படப் பாடல்களையும், பாரம்பரியமான பக்திப் பாடல்களையும் பாடினார். குறிப்பாக, 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' போன்ற உணர்வுபூர்வமான பாடல்களை அவர் பாடியபோது அரங்கம் முழுவதும் அமைதி நிலவியது. ஆதீனம் உட்பட அனைவரும் இசையில் மூழ்கி ரசித்தனர்.

கச்சேரி முடிவில், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள், இசையால் மக்களை வசீகரித்த கார்த்திக் ராஜாவை மனதாரப் பாராட்டி, அவருக்கு தருமபுரம் ஆதீன இசைப் புலவர்' விருதை வழங்கி கௌரவித்தார்.

'இசைப் புலவர்' விருது - இன்ப அதிர்ச்சி!

இசை நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், "தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இது வெறும் வாய்ப்பு மட்டுமல்ல, ஒரு பெரிய மரியாதை. இவ்வளவு பெரிய மரியாதை கிடைத்ததற்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. ஆதீனத்துக்கு என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எனது இசை நிகழ்ச்சியை குருமகா சந்நிதானம் அவர்கள் முழுவதுமாக அமர்ந்து, ரசித்து, 'நன்றாக இருந்தது' என்று சொன்னது எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். எதிர்பாராத விதமாக, தருமபுரம் ஆதீனத்தின் 'இசைப் புலவர்' என்ற விருதை எனக்கு வழங்கி அவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்," என்று பெருமிதம் பொங்கத் தெரிவித்தார்.

"ஆத்தா ஆத்தோரமா வாரியா..." - கார்த்திக் ராஜாவின் சுவாரஸ்யம்!

இந்த விருது குறித்து ஆதீனப் புலவர் ஒருவர் பேசும்போது, இதற்கு முன்பு 26-வது குருமகா சந்நிதானத்தால் இந்த விருது பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ்சுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அப்போது இடைமறித்துப் பேசிய கார்த்திக் ராஜா ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பதிவு செய்தார்.

"கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பெற்ற விருதுக்குப் பிறகு நான் வாங்கும் போது, நான் ரொம்பவும் சின்னவனாகத் தெரிகிறேன்," என்று சிரித்தபடியே கூறினார்.

மேலும், அவர் ஆதீனத்தின் புனிதமான சூழல் குறித்தும் பேசினார். "தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள் இங்கே இருந்ததால், நான் மிகவும் சுவாரசியமான, உற்சாகமான பாடல்களைப் பாடவில்லை. 'நீங்கள் (ஆதீனம்) கேட்டிருந்தால் கூட, ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா' என்ற பாடலைக்கூட நான் பாடத் தயாராக இருந்தேன். ஆனால், இந்த இடமும், சூழலும் அதற்கான உகந்த இடம் அல்ல. இருப்பினும், நான் பாடிய 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' என்ற பாடலை ஆதீனம் அவர்கள் ரசித்துக் கேட்டது எனக்குப் பெருமையாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget