மேலும் அறிய

காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

மயிலாடுதுறையில் அடிக்கல் நாட்டு விழா திமுக நகராட்சி தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த நகராட்சி சேர்மன்  எம்எல்ஏவிடம் சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம்  மயிலாடுதுறை அருகே ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டிடம்  4.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குமாடியில் கட்ட திட்டமிடப்பட்டு, அதன் அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.  இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கிய திமுக நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

அப்போது அவர் கூறுகையில், இந்த இடத்திற்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், எப்படி கட்டிடம் கட்டுவீர்கள் என பார்க்கின்றேன்? உங்கள் சௌரியத்திற்கு நினைத்துக்கொண்டு இருக்கிறதுக்கு நாங்கள் என்னனு நெனச்சியா?  எம்பி கிட்ட சொன்னீர்களா? எம்பி என்ன செத்தா போயிட்டாரு? சேர்மேன் கிட்ட சொன்னீர்களா? என்ன அர்த்தத்தில் செய்றீங்க? யார கேட்டு செய்றீங்க? தப்பாபண்றீங்க எம்பி என்ன செத்தா போயிட்டாரு தேதி அறிவிச்சீட்டாங்களா? இதையெல்லாம் கேட்டா நான் பொல்லாதவனா? எந்த அடிப்படையில் செய்றீங்க நீங்க தப்பா பண்றீங்க நகராட்சியில் பாதி இடம் தான் தீர்மானம் வச்சிருக்கு, பாதி இடத்திற்கு தீர்மானம் இல்லை என்றால் வேற மாதிரி செஞ்சிடுவேன். தலைய தலைய ஆட்டுனா என்ன அர்த்தம் சொல்றது இல்லையா. யார்கிட்டயும் சொல்லாமல் திருட்டுத்தனமா பண்றீங்களா? தலைவர் அறிவித்த திட்டம் தானே முதலமைச்சர் தானே (ஃபண்ட்) நிதி கொடுக்கிறார்.

காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச... மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய மயிலாடுதுறை நகராட்சி சேர்மன்...! pic.twitter.com/a5vDV7nyTz

— JAGANNATHAN (@Jaganathan_JPM) March 6, 2024

">

நாலு பேரு கிட்ட சொல்ற அதனால உனக்கு என்ன சங்கடம்? நீ ஒப்பந்தக்காரர் தானே மாவட்டத்திடன் சொன்ன அடுத்தபடியா யார் கிட்ட சொல்லணும் இன்ஜினியரிடம் கேட்டார். காலேஜ்ல பூஜைக்கு யார் யாருக்கெல்லாம் சொல்லணும் சொல்லிறேன்னு சொன்னாங்க என்று இன்ஜினியர் கூறினார். அதற்கு நகர மன்ற தலைவர் ப்ரோட்டகால் முறையில் பண்ணிட்டீங்களா? எல்லா எம்எல்ஏவுடையே முடிஞ்சிடுச்சா? எம்எல்ஏ சொல்ல மாட்டாருங்க எம்எல்ஏ இன்னைக்கு இருந்துட்டு  போயிடுவாருங்க எம்எல்ஏ காங்கிரஸ் ஓட்டுலியா ஜெயிச்சாரு? திமுக ஓட்டு வாங்கி தானே ஜெயிச்சாரு எம்எல்ஏவுக்கு என்ன? திமுககாரன் யாருமே கிடையாது திமுக காரன் எல்லாம் சின்டு புடிச்சிட்டு நிக்கணும் அடிச்சிட்டு நிக்கணும்? என இன்ஜினியரிடம் ஆவேசமாக பேசினார்.


காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

இதையடுத்து அங்கிருந்து விலகிச் சென்று காரில் அமர்ந்த எம்எல்ஏ ராஜகுமார், காரில் அமர்ந்தபடி நகராட்சி தலைவரை சமரசப்படுத்த முயன்றார். இதனால், கோபமடைந்த நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமாரிடம் சென்று இன்னும் நிறைய பேசுவேன் நீ வந்தது தப்பு. நீ எம்எல்ஏ தானே நீ வந்தது தப்பு எப்படி வந்த நான் ஒரு சேர்மன் இருக்கேனே உன்னை ஜெயிக்க வைத்தது யார் (மாயவரம்) மயிலாடுதுறையில் உனக்கு ஒருத்தன் ஓட்டு கேட்டானா? உன்ன நான் தான் ஜெயிக்க வச்சேன். வயிற்றெரிச்சல்ல இருக்கேன் உன் காரையே உள்ள விடமாட்டேன். ஏன் ரத்தம் எல்லாம் கொதிக்குது உன் எண்ணத்தில் இடி உழுவோ  திமுக காரங்களா அடிச்சிட்டு நிக்கணும் நீ மட்டும் காரில் சொகுசாக போக வேண்டுமா? சண்டை போட்டு டிவில வரணும் அதை பாக்கணும்.


காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

இது ஒரு தலைவர் நிகழ்ச்சி தானே எல்லார்கிட்டயும் சொல்லிட்டு செஞ்சா என்ன?  எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து டபீர்தெருவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருவரும் இணைந்து விலையில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி கலந்துகொண்டு ஒன்றாக சைக்கிள்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
உங்களிடம் NFDP அடையாள அட்டை இல்லையா? அப்படியானால் அரசு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்..
உங்களிடம் NFDP அடையாள அட்டை இல்லையா? அப்படியானால் அரசு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்..
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
ஆண்ட்ராய்டு போன் இருந்தா போதும்.. கிராமத்திலேயே வேலை, கைநிறைய ஊக்கத்தொகை! நாகை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!
ஆண்ட்ராய்டு போன் இருந்தா போதும்.. கிராமத்திலேயே வேலை, கைநிறைய ஊக்கத்தொகை! நாகை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
Maruti Price Hike: இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Udhayanidhi vs Vijay : சட்டசபையில் அடுத்தது சிஎம் விஜய்யின் டான்ஸ் தான்.! தவெக ஆட்சியின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
சட்டசபையில் அடுத்தது சிஎம் விஜய்யின் டான்ஸ் தான்.! தவெக ஆட்சியின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
Embed widget