மேலும் அறிய

ஒன்றாக மது அருந்தியபோது தகராறு – கொத்தனார் கட்டையால் அடித்துக் கொலை; ஓட்டுநர் கைது

ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது சிறையில் அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக ஓட்டுநர் ஒருவரை சீர்காழி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை பிரிந்து வாழும் நண்பர்கள் 

சீர்காழி அருகே உள்ள திருத்தோணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதான கண்ணன். இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ராஜா. இவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கண்ணன் மற்றும் ராஜா ஆகிய இருவரும் அவரவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். தனிமையில் வசித்து வந்ததால், இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மதுவின் போதையில் விபரீதம்

இந்நிலையில் நேற்று இரவு, கண்ணனும் ராஜாவும் வழக்கம் போல திருத்தோணிபுரம் பகுதியில் ஓரிடத்தில் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது அருந்திக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய்மொழியாகத் தொடங்கிய சண்டை, ஒரு கட்டத்தில் உக்கிரமடைந்து கைகலப்பாக மாறியது.

போதையின் உச்சத்தில் இருந்த ஓட்டுநர் ராஜா, ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கொத்தனார் கண்ணனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலை குலைந்த கண்ணன், தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். 

சிகிச்சைப் பலனின்றி இறப்பு 

கண்ணன் படுகாயமடைந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்துள்ளனர். ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலத்த காயமடைந்த கண்ணனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, படுகாயமடைந்த கண்ணன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

கொத்தனார் கண்ணன் உயிரிழந்த தகவல் சீர்காழி போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையிலான போலீசார் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த கண்ணனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கண்ணனை கட்டையால் அடித்துக் கொன்றது அவரது நண்பரும், ஓட்டுநருமான ராஜா என்பது உறுதியானது. இதையடுத்து, கொலைக்குக் காரணமான ஓட்டுநர் ராஜாவை சீர்காழி போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தும் போது ஏற்பட்ட சிறு தகராறு, நண்பனைக் கொலை செய்யும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ள இச்சம்பவம், சீர்காழி திருத்தோணிபுரம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் ஏற்படும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க, காவல்துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்த கொத்தனார் கண்ணன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget