![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
ABP Nadu Impact: புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - ஏபிபி நாடு செய்தி எதிரொலியால் உடனடி அகற்றம்
ஏபிபி நாடு செய்தி வெளிட்டதை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தேங்கிய மழை நீரை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது.
![ABP Nadu Impact: புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - ஏபிபி நாடு செய்தி எதிரொலியால் உடனடி அகற்றம் ABP Nadu Impact Rain Water Seeping into Sirkazhi Vaitheeswaran Temple Action Taken By Officials - TNN ABP Nadu Impact: புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - ஏபிபி நாடு செய்தி எதிரொலியால் உடனடி அகற்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/6b8a7303b7d3f9b781beaddc5c1a0d821704698960374733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கி பக்தர்கள் அடைந்த சிரமம் குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து தேங்கிய மழை நீரை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை ஆங்காங்கே பெய்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் மிகத் தீவிர கனமழை தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?
அதேபோல டிசம்பர் மாதத்தில் பின்னாட்களில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் மோசமாக இருந்தது. அதன்பிறகு தமிழ்நாட்டில் பெரியளவில் மழை எங்கும் இல்லாத ஒரு சூழலே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழை இன்னுமே கூட தொடரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமையான செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோயிலின் வளாகத்தில் உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இது குறித்து ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் கோயில் வளாகத்தில் தேங்கிய மழை தண்ணீரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Bigg Boss Vichitra: பிக்பாஸ் ஃபைனல்ஸ் மேடையை தவறவிட்ட விசித்ராவுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)