மேலும் அறிய

யாதவ கல்லூரி நிர்வாகிகள் தேர்தலை மீண்டும் நடத்துக - முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த முன்னாள் மாணவர்கள்!

மதுரை யாதவ கல்லூரியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரை யாதவ கல்லூரியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், அந்த தேர்தலை மீண்டும் சரியான முறையில் நடத்த வேண்டும் என்றும் யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தற்பொழுது யாதவர் கல்லூரி குறித்து தவறான தகவல்களையும் உண்மைக்கு புறம்பான விஷயங்களையும் பொதுமக்களிடமும், சமுதாய மக்களிடமும் சமூகவளைதளங்கள் மூலம் திணிக்க முற்படிகிறார்கள். அது குறித்து சமுதாய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சார்பில் நாங்கள் உங்களை சந்திக்கிறோம்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தமிழகத்தில் தீர்மானிக்கும் மிகப்பெரிய வாக்கு வங்கியாக யாதவர்கள் வாக்கு வங்கி இருக்கும் அதனை பிரிக்க வேண்டும் என்று சில கட்சிகளின் சூழ்ச்சியில் தான் பிறந்த இனத்திற்கு துரோகம் செய்யும் வகையில் நவனீத கிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். ஒருபோதும் இந்த சமுதாயம் அவரை மன்னிக்காது.

நவநீதகிருஷ்ணன் செய்யும் சூழ்ச்சி வேலைகளில் தற்போது அம்பலமாகியுள்ளது. நெல்லை யாதவர்கள் ராமநாதபுரம் யாதவர்கள், மதுரை யாதவர்கள் மற்றும் சிவகங்கை யாதவர்கள் என்று பிரிவினையை உருவாக்கி ஒரு நரி, நான்கு மாடுகள் கதை போல் யாதவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளார் நவநீதகிருஷ்ணன். கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி இது குறித்த அரங்கேற்றம் சென்னையில் நடைபெற்றது இது ஒரு நாட்டியாஞ்சலி அரங்கேற்ற நிகழ்வில் இது குறித்த திட்டம் தீட்டப்பட்டது

அதன் வெளிப்பாடாகவே திரு.நவநீதகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா மதுரையில் மிகப்பெரிய பொருட்செலவில் நடைபெற்றது. அந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் படைசூழ அவரது சம்மந்தி தலைமையேற்று வெகு விமர்சையாக மேற்படி சதிதிட்டம் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.


யாதவ கல்லூரி நிர்வாகிகள் தேர்தலை மீண்டும் நடத்துக - முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த முன்னாள் மாணவர்கள்!

நடைபெற்றுள்ளன பொதுக்குழுவை கூட்டாமலேயே தேர்தல் நடைபெற்று முடிந்த கல்லூரி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தேர்தல் அறிவிப்பு முறையாக தினசரி நாளிதழில் பிரசுரம் செய்யப்படவில்லை மேலும் கல்லூரி உறுப்பினர்கள் அனைவரையும் நீதிமன்றம் சேர்த்து விட்டதாக எதுவும் கூறவில்லை முறையாக சட்டப்படி அதனை கோர்வை செய்ய பொதுக்குழுவைக் கூட்டி அதனிடம் அனுமதி வாங்கிய பிறகு தேர்தல் நடத்துங்கள் என்று எவ்வளவு கூறியும் நிர்வாக அதிகாரி செவி சாய்க்கவில்லை.

பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தால் தேர்தல் முடிந்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு கடந்த 09-09-2023 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என இரவு 9 மணிக்கு தீர்ப்பு வருகிறது தீர்ப்பு வெளிவந்த 12 மணி நேரத்திற்குள்ளாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுப்படி முடிவு அறிவித்திருந்தால் உண்மையில் பாண்டவர் அணியைச் சேர்ந்த எட்டு நபர்களும் கே.பி.எஸ் அணியைச் சேர்ந்த மூன்று நபர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கே.பி.எஸ் அணியைச் சேர்ந்த எட்டு நபர்களும் பாண்டவர் அணியைச் சேர்ந்த மூன்று நபர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது சமூக வலைதளங்களில் வலம் வரும் முறைகேடாக பதிவான சொஸ்திக் முத்திரை அல்லாத வாக்கு சீட்டுகள் இடம் பெற்று இருக்கின்றன. இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது) இந்த வாக்கு சீட்டுகள் எவ்வாறு வந்தது என தெரியவில்லை என்று நிர்வாக அதிகாரியான ஓய்வு பெற்ற நீதி அரசர் கூறிய ஒரு வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருந்தோம் ஆனால் அதுவும் நவநீதகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளில் விழாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் சட்டப்படி அங்கிகாரம் கிடைக்காத நிர்வாகக் குழுவில் இடம் பெற்றவர்கள் யாதவ சமுதாயத்திடம் கல்லூரி வர வேண்டும் என்று வெளியில் கூப்பாடு போட்டுக் கொண்டு மாற்று சமுதாயத்தினரான நாராயணசாமி என்பவர் கட்டளையிடும் அனைத்திற்கும் அடிபணிந்து நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


யாதவ கல்லூரி நிர்வாகிகள் தேர்தலை மீண்டும் நடத்துக - முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த முன்னாள் மாணவர்கள்!

இந்த நாராயணசாமி நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்தபோது எங்கள் சங்கம் வலுவான எதிர்ப்பை தெரிவித்ததன் காரணமாகவே அவர் அந்த பதவியில் நியமிக்கப்படவில்லை எனக் கூறிவிட்டார்கள். அதற்கு பதில் நவனீதகிருஷ்ணன் அவர்கள் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்துள்ளனர். இது இன்னும் கேலிக்கூத்து.

யாதவர் கல்வியியல் கல்லூரி காலாவதியாகி உள்ள நிலையில் அந்த கல்லூரிக்கு வேலைக்கு ஆள் எடுப்பது போல் விளம்பரம் செய்கின்றனர் மேலும் வருடங்களுக்கு முன்னாள் வேலை 15 நடைபெற்றதாக கூறி அந்த ஒப்பந்ததாரருக்கு பணம் தராமல் நிலுவையில் உள்ளது எனக்கூறி அதற்கு 46 லட்சம் தர வேண்டும் என முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தியதும் எங்கள் சங்கம்தான் கடைசியாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாதவ சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண் ஆசிரியை தற்காலிக பணியில் வேலை செய்து வந்த நிலையில் அவரை வேலையில் இருந்து நீக்கி உள்ளனர்.

இதனையும் கடுமையாக எதிர்த்து உள்ளோம் மொத்தத்தில் தனது பினாமிகளை நிர்வாகிகளாக நியமித்து தினமும் கல்லூரி உறுப்பினர் அல்லாத பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு கல்லூரிக்குள் நுழையக்கூடாது என தடை உத்தரவு போடப்பட்டிருந்த 144 நவனீதகிருஷ்ணன் கல்லூரிக்குள் அத்துமீறி வலம் வருகிறார்.

ஏதாவது இது குறித்து கேட்டால் "ராமன் சீதை உறவு", "அனுமன் ராமன் உறவு "ராமன் லட்சுமணன் உறவு" எனக்கூறி பல கதைகளை கட்டுகிறார். இந்த கதைகளுக்கு பின்னால் பல உண்மைகள் உள்ளன இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை நிச்சயம் சட்டபடி முறையாக ஒரு நிர்வாகம் வந்த பிறகு இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க எங்கள் சங்கம் வலியுறுத்தும்.

யாதவர் கல்லூரி முறைகேடு குறித்து முறையாக முதல்வரிடம் எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த பல்வேறு நபர்கள் புகார் அளித்துள்ளனர் எனவே முறையாக சட்டப்படி இதில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது நிச்சயம் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.” என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget