மேலும் அறிய
World Heritage Day: "மரபை காக்க விழிப்புணர்வு வேண்டும்” - சிவகங்கை தொல்நடைக் குழு கோரிக்கை
தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் மற்றும் கல்லூரிகளில் தொன்மையின் சிறப்பை எடுத்துரைப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழு ஈடுபட்டு வருகிறது.

தொல்லியல் சுற்றுலா
மரபை காக்க விழிப்புணர்வு வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் நாளை உலக மரபு நாளாக கொண்டாட யுனஸ்கோ அமைப்பு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 18 ஆம் நாள் உலக மரபு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இனமும் தன்னிடத்தே தனித்தன்மையுடைய மரபை பாரம்பரியத்தை பெற்றுள்ளன அவற்றை பாதுகாக்க இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. அவ்வாறான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நாளாக உலக மரபு நாளை நாம் அனைவரும் கொண்டாடி நமது பாரம்பரியத்தை மரபை இளைஞரிடம் கொண்டு சேர்ப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நமது கடமையாகும்.

தொல்லியல் கருவூலமான சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை மாவட்டம் பொதுவாக தொல்லியல் சின்னங்களாலும் கீழடித் தொகுப்பு அகழாய்வுகளாலும் தொல்லியல் கருவூலமாக விளங்குகிறது. கீழடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு பார்வையிடப்படுகிறது அது சிவகங்கை மற்றும் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.

சிவகங்கை மாவட்டம் திருமலை.
திருமலையில் நான்காயிரம் ஆண்டுகள் பழமையானதும் தமிழகத்தில் கீழ்வாலை, செத்தவரை (விழுப்புரம் மாவட்டம்), கிடாரிப்பட்டி (மதுரை மாவட்டம்) மற்றும் சந்திராபுரம் (வேலூர் மாவட்டம்) ஆகிய பாறை ஓவிய தளங்களில் காணப்படுகிற பறவை முகம் கொண்ட மனித உருவங்களை இங்கும் காணலாம். விலங்கின் மீது மனிதன் அமர்ந்து வேட்டையாடுகிற வேட்டைக் காட்சி, கோட்டு உருவங்கள் ஆகியவை செஞ்சாந்து பாறை ஓவியங்களாக காணக்கிடைக்கின்றன.

தமிழி எழுத்து.
2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து.. இயற்கையாய் அமைந்த குகைத் தளத்தின் மேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ள கா டிக்கு மேலே எருக்காடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்’ என்னும் தமிழி எழுத்து தொடர் காணப்படுகிறது.
முற்கால பாண்டியர்களின் குடைவரை கோவில்.
சிவகங்கை மாவட்டத்தில் குன்றக்குடி பிள்ளையார்பட்டி மகிபாலன்பட்டி பிரான்மலை போன்ற இடங்களில் குடைவரை கோவில்கள் காணப்படுகின்றன. அதில் திருமலையில் காணப்படும் குடைவரை கோவிலில் பிரான்மலை குடைவரை போல சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலமாக காட்சி தருவது சிறப்பு.

32 கல்வெட்டுகள்.
மலைப்பகுதியின் இடையில் குடைவரை கோவிலை அடுத்து அமைந்துள்ள கட்டுமான கோவிலில் முதலாம் மாறவர்மன், குலசேகர பாண்டியன் போன்றவர்களின் 32 கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக தமிழக அரசால் இரண்டு இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை அரண்மனை சிறுவயல் மருது பாண்டியர் கோட்டையும் திருமலை தமிழி எழுத்தும் ஆகும்.
விழிப்புணர்வு தேவை.
தமிழக அரசு திருமலை மேல் உள்ள தமிழி எழுத்து கல்வெட்டை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக (2015-16) அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால் பொதுவாக தொடர்ந்து இங்கு உள்ள குகைத்தளத்தில் மது அருந்துவதும் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பாறைகளில் வண்ணம், உளி கொண்டு எழுதுவதும் பாரம்பரியமிக்க பாறை ஓவியங்களில் கிறுக்கி வைப்பதும் தொடர்கதையாக உள்ளன இதன் சிறப்பை பொதுமக்களிடத்தும் இளைஞர்களுக்கும் வெளிப்படுத்துவதன் வழி இதை பாதுகாக்க முடியும்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் தொன்மையை, மரபை பாதுகாப்போம்.
உலக மரபு நாளில் மட்டுமல்லாது தொடர்ச்சியாக தொன்மையை பாதுகாப்பதில் பள்ளிகளில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் மற்றும் கல்லூரிகளில் தொன்மையின் சிறப்பை எடுத்துரைப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழு ஈடுபட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion