மேலும் அறிய

2 மாதம் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் மனு!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் 2 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக, பரோல் உள்ள நிலையில், மற்றொருவரான ரவிச்சந்திரனும் 2 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.அவரது வழக்கை பரிசீலிக்க உள்துறைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 மாதம் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் மனு!
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரும் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை உள்ளனர். இவர்களில், பேரறிவாளன் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் இருந்து வருகிறார். அவருக்கு தி.மு.க அரசு தொடர்ந்து விடுப்பு அனுமதித்து வருகிறது. இதையடுத்து, ஏற்கனவே நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்பட பலர் பரோல் கேட்டு சிறைத்துறையிடம் விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களுக்கு பரோல் வழங்க அரசு மறுத்து விட்டது. இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு வழங்கியுள்ள மனுவை பரிசீலித்து, தனக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், அவர் சார்பில் அவரது அம்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.

2 மாதம் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் மனு!
 
மனுவில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் 9.9.2018 தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் தற்போது குடியரசுத் தலைவர் முன்பு உள்ளது. இதற்கிடையில் எனது ஒரு கண்ணில் கடந்தா 2019 ஆகஸ்ட் 2-ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது என் உடனிருந்து கவனிப்பதற்காக ரவிச்சந்திரனை வெளியில் விட 2 முறை மனு அளித்தேன். இரு மனுக்களையும் சிறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். தற்போது, எனது மற்றொரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் விடுமுறை வழங்கக் கோரி இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சிறைத்துறை அதிகாரியிடம் மனு அளித்தேன். என் மனுவைப் பரிசீலித்து ரவிச்சந்திரனை 2 மாத பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

2 மாதம் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் மனு!
 
இந்த மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார். விசாரணையின்போது, பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டு இருப்பதையும் எடுத்துக்காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனுதாரரின் மனுவை முன்னுரிமை அடிப்படையில் தமிழக உள்துறைச் செயலர் சட்டப்படி பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை.. (09.06.26) முழு லிஸ்ட் இது தான் !
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை.. (09.06.26) முழு லிஸ்ட் இது தான் !
கோயில் முறைகேடுகள் குறித்து அதிரடி எச்சரிக்கை: யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி - அமைச்சர் ரமேஷ்
கோயில் முறைகேடுகள் குறித்து அதிரடி எச்சரிக்கை: யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி - அமைச்சர் ரமேஷ்
பைக் , வீடு மற்றும் சேப்டி லாக்கர் ஆகியவற்றின் சாவி தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
பைக் , வீடு மற்றும் சேப்டி லாக்கர் ஆகியவற்றின் சாவி தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
எச்சரிக்கை அல்ல, பொறுப்புணர்வு.. பள்ளிகளில் அமைச்சர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு ?
எச்சரிக்கை அல்ல, பொறுப்புணர்வு.. பள்ளிகளில் அமைச்சர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு ?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
Embed widget