மேலும் அறிய
சினிமா மாணவனாக இருந்தேன் இப்போது மார்க்சிஸ்ட் மாணவனாக உள்ளேன் - வெற்றிமாறன் நெகிழ்ச்சி
விடுதலை படத்திற்கு முன்பு மேடையை அலங்கரிக்கிற பேச்சுகளை பேசும் கவர்ச்சி உள்ள தலைவர்கள் கண்ணுக்கு தெரிந்தது. - வெற்றிமாறன்.

நினைவுப் பரிசு பெற்ற வெற்றிமாறன்
Source : whats app
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாட்டில் இயக்குநர் வெற்றிமாறன் மேடையில் பேசினார். வெற்றிமாறனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி நிர்வாகி மதுக்கூர் ராமலிங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இயக்குநர் பாலுமகேந்திர பற்றிய உங்களது கருத்து
இன்றைக்கு சினிமாவில் உள்ள தேடல் சினிமாவின் மாணவனாக இருப்பதற்கு சமூகத்தோடு எனக்கு இருக்கிற தேடலும், தொடர்பும், சமூகத்தின் மீதான கோபமும், அவருடன் இருந்ததால் இருக்கிறது எனக்கு அடையாளம் இருக்கிறது என்றால் அவர் தான்.
மதுரை பற்றிய கேள்விக்கு?
மதுரை மக்கள் உரிமையாக அன்பு செலுத்துபவர்கள், சாப்பாட்டுக்கு முக்கியவத்துவம் அளிப்பது ஸ்பெஷல், ஆடுகளம் எடுக்க 2.5 ஆண்டு இருந்தேன். அதற்கு காரணம் இந்த ஊரின் தன்மைதான்.
அசுரன் படம் குறித்த கேள்விக்கு? நீட் தேர்வு போல பயப்படுகிறார் என கூறியபோது :
நீட் தேர்வுக்கு எல்லாம் பயந்து தானே ஆக வேண்டும் என்றார்.
நாவலை படமாக்கும் அனுபவம் குறித்த கேள்விக்கு?
ஒரு நாவலை படமாக எடுக்க முதலில் செய்ய வேண்டியது நாவல் ஈர்த்தது ஏனோ அதன் அடிப்படை சிந்தனை உன்னை முன்நகர்த்தினால் சினிமாவாக எடுக்க தகுதி உள்ளது என பாலுமகேந்திரா சார் கூறுவார். பாலுமகேந்திரா சார் வேலை செய்வதை பார்த்தது தான் என் அனுபவம். வெட்கை நாவல் அசுரனாக வந்தபோது சிலருக்கு பிடிக்கவில்லை.
விடுதலை படம் குறித்து கேள்விக்கு?
விடுதலை படம் என்பது எனது 45 ஆண்டு வாழ்க்கையை விட நிறைய கத்துக்கொடுத்தது நிறைய மனிதர்கள், தலைவர்களை பற்றி தெரிந்துகொண்டேன். விடுதலை படத்திற்கு முன்பு மேடையை அலங்கரிக்கிற பேச்சுகளை பேசும் கவர்ச்சி உள்ள தலைவர்கள் கண்ணுக்கு தெரிந்தது. மக்களோடு நின்று மக்களுக்கான விடுதலையை வென்றெடுத்த தலைவர்களை தெரியவில்லை, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரச்னை என்றால் கேள்வி கேட்கும் துணிச்சல் மிக்க தலைவர்கள் நம்பும் தத்துவம், கொள்கை தான் காரணம் விடுதலை படத்திற்கு பிந்தைய 4 ஆண்டு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. சினிமா மாணவனாக இருந்தேன் இப்போது மார்க்சிஸ்ட் மாணவனாக உள்ளேன். என்னுடைய கருத்து என்பது எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சியம் இல்லை, என்றால் அது மக்களுக்கு எதிராக நின்றுவிடும் என்பது தான் புரிதல். ரொம்ப பேசுறாங்கப்பானு விடுதலை இரண்டாம் பாகத்தில் என சொன்னார்கள். இந்த மேடையில் நிற்பது மரியாதையாக நினைக்கிறேன். இந்த மாநாட்டில் ஒரு நிகழ்வில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் எப்படி அமையப்போகிறது தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion