உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: தேனியில் முகாம்கள் எங்கே? உங்கள் குறைகளை தீர்க்க இதோ வாய்ப்பு
முகாமின் விவரங்கள் மற்றும் நேர அட்டவணை “உங்களுடன் ஸ்டாலின்” அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ([ungaludanstalin.tn.gov.in/](https://ungaludanstalin.tn.gov.in/)) வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த நலத்திட்டங்களை முன்னிருத்தி பிரச்சாரம் செய்ய உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்களை குறித்து காண்போம்.
மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டு உடனடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் – உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்திலும் பல உள்ளாட்சி அமைப்புகளின் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள வார்டு 3 மற்றும் 4 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்காக, சோழிய செட்டியார் உறவின்முறை ஆரிய வைசிய மண்டபத்தில் முகாம் நடைபெறும். இங்கு மக்கள் தங்களின் அரசு தொடர்பான கோரிக்கைகள், புகார்கள் மற்றும் நலத்திட்ட விண்ணப்பங்களை நேரடியாக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம்.
சின்னமனூர்
சின்னமனூர் நகராட்சி வார்டு 24 பகுதியில் வசிக்கும் மக்களுக்காக, பெருமாள் கோவில் ரோட்டில் உள்ள சி.ஆர்.மஹால் வளாகத்தில் முகாம் நடைபெறும். குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களே நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.
போ. மீனாட்சிபுரம்
பொட்டல்கலம் பகுதியிலுள்ள செல்லாயியம்மன் கோவில் தெரு அருகே, காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி மக்களுக்காக முகாம் நடக்கிறது. வார்டு 1 முதல் 7 வரை உள்ள மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம்
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், அழகாபுரி, பாலக்கோம்பை, பழையக்கோட்டை, இராஜக்காள்பட்டி, இராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக, இராஜக்காள்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில், சமூக நலத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, மின்துறை, நீர்வழங்கல் வாரியம் உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்பார்கள். மக்கள் தங்களின் நிலம் தொடர்பான சான்றுகள், வருமானச் சான்றிதழ், ஓய்வூதிய விண்ணப்பம், வீட்டு வசதி கோரிக்கை, குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள், சாலை பழுது, கழிவுநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம்
முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சில பிரச்சினைகள் இடத்திலேயே தீர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் அரசு, மக்களிடம் நேரடியாக சென்று, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
முகாமின் விவரங்கள் மற்றும் நேர அட்டவணை “உங்களுடன் ஸ்டாலின்” அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ([ungaludanstalin.tn.gov.in/](https://ungaludanstalin.tn.gov.in/)) வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் அதிக அளவில் பங்கேற்று தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.முக ஸ்டாலின் கொண்டு வந்துள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்வரும் 2026 தேர்தல் காலத்தில் பிரச்சாரத்தில் திமுக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது





















