மேலும் அறிய

அரிட்டாபட்டியில் கால்வைத்த ஸ்டாலின்: 11, 608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்குகள் வாபஸ்.!

Madurai Arittapatti Tungsten Case Withdrawn: மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட 11, 608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மதுரை அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் தனிமம் எடுப்பதற்கான திட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததையடுத்து, அப்பகுதி மக்களை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்தார். இந்நிலையில், டங்ஸ்டன் எடுப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 11, 608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அரிட்டாபட்டி டங்ஸ்டன்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் மேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை வளங்கள், பல்லுயிர் தளங்கள் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. 


அரிட்டாபட்டியில் கால்வைத்த ஸ்டாலின்: 11, 608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்குகள் வாபஸ்.!

வழக்குகள் வாபஸ்:

இதையடுத்து, அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் போரட்டம் நடத்தியவர்கள் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. 

இந்நிலையில், டங்ஸ்டன் எடுப்பதற்கு எதிரான போரட்டத்தில் ஈடுபட்ட 11, 608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். 

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். “சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேள்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். 

Also Read: TN Weather: இன்னும் போகலையா.! கடைசியா, 5 மாவட்டங்களில் கனமழை கொட்டிவிட்டு போகும் வடகிழக்கு பருவமழை

அரிட்டாபட்டியில் பாராட்டு விழா:

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் , டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அப்போது, சுரங்கம் அமைந்தால், நான் பதவியிலும் இருக்க மாட்டேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் , தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, விசிக , காங்கிரஸ், தவெக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் , பாஜக மாநில தலைவரும், சுரங்கம் அமைக்க வேண்டாம் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என கூறினார். 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக, மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து , நேற்றைய தினம் டங்ஸ்டன் எதிர்ப்பு குழுவினர் , நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இதையடுத்து, இன்று அரசு சார்பில் அரிட்டாபட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்நிலையில்  , டங்ஸ்டன் போராட்ட குழுவினர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் , இன்று அரிட்டாபட்டிக்குச் சென்று , அங்குள்ள மக்களை சந்தித்து, பாராட்டு விழாவில் பங்கேற்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
Trump Vs Modi: “உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
“உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
Trump Vs Modi: “உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
“உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
Quarterly Exams: காலாண்டுத் தேர்வு தேதிகள் வெளியீடு! 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விடுமுறை எப்போது?
Quarterly Exams: காலாண்டுத் தேர்வு தேதிகள் வெளியீடு! 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விடுமுறை எப்போது?
ஐடி ஊழியரை கடத்திய வழக்கில் லக்‌ஷ்மி மேனனிடம் விசாரணை...பாரில் நடந்தது என்ன ?
ஐடி ஊழியரை கடத்திய வழக்கில் லக்‌ஷ்மி மேனனிடம் விசாரணை...பாரில் நடந்தது என்ன ?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.