மேலும் அறிய

தேனியில் தொடர் மழை எதிரொலி - முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை அதிகரிப்பால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரன்கங்ள் மற்றும் வனப்பகுதிகளில் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரம் : முல்லை பெரியாறு அணை, 142 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் தற்போது 127.60 அடி வரை தண்ணீர் உள்ளது. அணையின் கொள்ளளவு 4180 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு 725 கன அடியாகவும் உள்ள நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் நீரைக்கொண்டு கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 14,707 ஏக்கரில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். 

Breaking News Live: நரிக்குறவர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்ட முதல்வர்..! குழந்தைக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சி..! 


தேனியில் தொடர் மழை எதிரொலி -  முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்வு

மேலும் முல்லை பெரியாறு அணை நீரானதுமதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் வருடந்தோறும் இரண்டு போக நெல் சாகுபடி செய்து வருவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் போக சாகுபடிக்காக ஜூன் 1ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் வழக்கமாக உள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் மழையின்மை, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தண்ணீர் திறப்பில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. 

தேனியில் தொடர் மழை எதிரொலி -  முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்வு

கடந்த 2016 ஆம் ஆண்டு நீர்மட்டம் குறைவால் ஒன்றரை மாதம் தாமதமாக ஜூலை 14ஆம் தேதி முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்மட்டம் 119.20 அடியாக இருந்தது. 2017ஆம் ஆண்டு மூன்று மாதங்கள் தாமதமாக செப்டம்பர் 25ஆம் தேதியும் 2018ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதியும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியும், 2020 ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில் இரு போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியவில்லை. அதேவேளையில் கடந்த ஆண்டு நீர்மட்டம்  பொதுமானதாக இல்லாமல் (130.90) இருந்ததால் ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

ABP NADU 2nd Year ceremony : தொடர்ந்து பயணிப்போம்! இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு..!


தேனியில் தொடர் மழை எதிரொலி -  முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்வு

இரு போக நெல் சாகுபடியையும் முழுமையாக செய்ய முடிந்தது. இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்த நிலையிலும் கடந்த 5 நாட்களாக நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 127 அடியை எட்டியுள்ளது. மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்யும் நிலை உள்ளதால் நீர்மட்டம் உயரும். இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே இருபோக சாகுபடியை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செய்ய முடியும். முந்தைய ஆண்டுகளில் பலமுறை பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மழை மற்றும் அணை நீர்மட்டம் போதுமானதாக இருப்பதால் தேனி மவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget