மேலும் அறிய

ஊரணியில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

பெரியகுளம் அருகே ஒரே பகுதியைச் சேர்ந்த  இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் வடுகபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் அருகே ஊரணியில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு பள்ளி மாணவர்களை காணவில்லை என நேற்று இரவு 11 மணி வரை தீயணைப்புத்துறையினர் ஊரணியில் தேடிய நிலையில் சிறுவர்களின் உடல் கிடைக்காததாலும்  மேலும் இரு சிறுவர்கள் ஊரணியில் குளித்தார்களா? என்ற சந்தேகம் இருந்ததால் தேடுதலை ஊர் மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கைவிட்டனர்.


ஊரணியில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் தென்றல் (11) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சௌந்தரபாண்டியன்(11) ஆகிய இருவரும் வடுகபட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மார்க்கண்டேயர் நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.


ஊரணியில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

தென்றல் மற்றும் சௌந்தர பாண்டியன் ஆகிய இருவரும் பள்ளி சென்று வீடு திரும்பிய நிலையில் வடுகபட்டி  பகுதியில் உள்ள கட்டையன் ஊரணியில் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் நீண்ட நேரமாக இருவரும் வீடு திரும்பாத நிலையில் இரு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வடுகபட்டி பகுதி முழுவதும் தேடிய நிலையில், ஊரணி பகுதிக்கு சென்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று இரவு 8 மாணிக்கு பின்பு ஊரணி பகுதியில்  இறங்கி தேடிப் பார்த்த பொழுது  இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.


ஊரணியில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

மேலும் நீரில் மூழ்கி பலியான இரு சிறுவர்களுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வந்ததாக கூறப்பட்ட நிலையில்,  பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர இரவு ஒன்பது மணி முதல்  ஊரணி முழுவதும் தேடிப் பார்த்த பொழுது ஊரணியில் மேலும் இரு சிறுவர்களின் உடல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் இரு சிறுவர்கள் தான் வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேடும் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர்  சிறுவர்களின் உடலை தேடும் பணியை கைவிட்டனர்.


ஊரணியில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

மேலும்  நீரில் மூழ்கி பலியான சிறுவர்களின் உடலை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரே பகுதியைச் சேர்ந்த  இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் வடுகபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.