மேலும் அறிய

கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ் அப் நம்பர்; மக்கள் யாரும் நம்ப வேண்டாம் - தேனியில் பரபரப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெயரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பேசியது விசாரணையில் தெரியவந்ததால் அதிர்ச்சி.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது எந்த அளவு உண்மையோ அந்த அளவு நவீன முறையில் திருடும் திருடர்களும் அதிகரித்து உள்ளனர். அதற்கு பல்வேறு உதாரணங்கள் எடுத்துக்கூறலாம். ஆன்லைன் பண  மோசடி, போலி வங்கி கணக்கு மூலம் மோசடி செய்வது, அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசியில் ஒருவரை அணுகி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடுவது, போலி ஆப்கள் மூலம் ஒருவருக்கு தெரியாமலேயே அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, வாட்ஸ்அப் மூலம் மிரட்டுவது, ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி மிரட்டி பணம் கேட்பது  என பல்வேறு சம்பவங்களும் நடந்து வருகின்றன.


கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ் அப்  நம்பர்; மக்கள் யாரும் நம்ப வேண்டாம் -  தேனியில் பரபரப்பு

அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட  சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக சென்ற சில தினங்களுக்கு முன்பு கூட தேனி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கடன் பெற்ற ஒருவரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தேனி சைபர் கிரைம் போலீசார் வெளி மாநிலத்திற்கு சென்று பிடித்து வந்து விசாரணை செய்தபோது, அவர்கள் சுமார் 11 கோடி ரூபாய் வரை முறைகேடாக மிரட்டி பணப்பரிவர்த்தனை செய்ததும், மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக  5 பேரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8088765749 என்ற  எண்ணிலிருந்து அலுவலர்கள் உட்பட பல நபர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.


கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ் அப்  நம்பர்; மக்கள் யாரும் நம்ப வேண்டாம் -  தேனியில் பரபரப்பு

அந்த குருஞ்செய்தியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்துடன் பொதுமக்கள் மற்றும் அலுவலர்களை நலம் விசாரிப்பது போல் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இதனை கண்டு சந்தேகமடைந்த தேனி மாவட்ட அரசு அலுவலர்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் கன்னடம் மற்றும் இந்தியில் தெளிவற்று பேசியுள்ளார். குருஞ்செய்தியானது தவறான செயல்களை செய்திட நோக்கில் அனுப்பப்பட்டு உள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. . இதையடுத்து ஆட்சியர் கவனத்திற்கு அலுவலர்கள் எடுத்துச் சென்றதன் பெயரில் ஆட்சியர் உடனடியாக இந்த தவறான செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது .


கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ் அப்  நம்பர்; மக்கள் யாரும் நம்ப வேண்டாம் -  தேனியில் பரபரப்பு

அதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மேற்கண்ட எண்ணிலிருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தோ  தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் வந்தால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் இதுபோன்ற அரசுத்துறை அலுவலர்கள் உட்பட அனைவரிடத்திலும் இந்த ஆன்லைன் மோசடி தொடர்ந்து நடந்து வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget