மேலும் அறிய

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

பருவ நிலை மாற்றம் போன்ற காரணங்களால் இரு போக நெல் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

இந்தியாவின் பெரும்பாலான நீர்த்தேவையை பூர்த்தி செய்வதில் தென்மேற்கு பருவமழை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  முக்கிய மழை பருவமான, தென் மேற்கு பருவ மழை வழியாகவே, நாடு முழுவதுக்கும் தேவைப்படும் நீரின் அளவு பெரும்பாலும் பூர்த்தியாகிறது. வேளாண்மை மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், தென் மேற்கு பருவ மழையையே நம்பியுள்ளன. தென் மேற்கு பருவமழையால் கேரள, கர்நாடக மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் அதிகமாக பலன் பெற்றாலும், இந்த இருமாநிலங்களிலும் பெய்யும் மழையானது ஆறுகள் வழியாக தமிழ்நாட்டை வந்தடைகின்றன. இந்த ஆண்டுக்கான மழை நிலவரம் குறித்த, நீண்ட கால கணிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்து இருந்தது அதன்படி, ஜூன் ஒன்றாம் தேதி தென் மேற்கு பருவ மழை துவங்கும் என்றும், ஆகஸ்ட் மாதம் வரை பொழியும் தென்மேற்கு பருவமழையானது இயல்பான அளவில் இருக்கும் என கணித்திருந்தது. 

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

தென்மேற்குப் பருவ மழை வாயிலாகத்தான் தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் நீரின் தேவை பூர்த்தியாகிறது எனலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால், விவசாயம் செழிப்பதுடன், முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை,  சோத்துப்பாறை அணை என பல அணைகளும், ஏரி,  குட்டை, குளம் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழியும்.  கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் தேதி தொடங்கும். ஆனால் இந்தாண்டு காலநிலை மாறி முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கியது. 

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

இந்த தென்மேற்குப் பருவமழையின் மூலம், தேனி மாவட்டத்திலுள்ள அணைகள் நிரம்பும். இதனை நம்பி தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்வர். ஆனால் சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை, சற்றுக் காலநிலை மாறி மாறி மழை பெய்து வருவதால், தேனி மாவட்ட விவசாயிகள்,  அதிலும் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இருபோகம் நெல் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

முறையான மழைப்பொழிவு இல்லாததாலும் முல்லைப் பெரியாறு அணையில் உரிய நீர்த் தேக்கத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தாமல் இருப்பதும், இதற்கு காரணமாக தெரிவிக்கின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீதிமன்ற உத்தரவுபடி 142 அடி உயர்த்த வேண்டும் என்ற ஆணை உள்ளது.  ஆனால் அம்மாநில அரசு அதனை பொருட்படுத்தாமல், 138 அடி  வரை மட்டுமே அம்மாநில அரசு அதிகபட்சமாக நீர்மட்டத்தை வைத்துள்ளது. அணையின் நீர்மட்டம் 138 அடி நெருங்கியதும்,  அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும். இதனால் தேவையான நேரத்தில் இரு போகம் நெல் சாகுபடி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்.

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், " கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரதானமாக நெல் விவசாயமே உள்ளது. நெல் விவசாயத்தில் நீரின் பங்கு இன்றியமையாதது. முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டம் தேவையான அளவு உயர்த்தாமல் இருப்பதும்,  பருவநிலை மாற்றத்தால் மழை அளவு குறைந்துள்ளதாலும், மற்றும் உரம் விலை உயர்வு, தேவையான நெல் ரகத்தை தேர்ந்து எடுப்பதில் சிக்கல், வியாபாரிகள் மூலம் உரிய விலை கிடைக்காமல் இருப்பது, போன்ற பல சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்தை கைவிடும் நிலையிலும்  அல்லது ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யக் கூடிய ஒரு அவல நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். எனவே தமிழக அரசு முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்யவும், தேவையான நேரத்தில் அணையில் இருந்து நீர் திறந்து விடவும் கோரிக்கை வைத்துள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget