மேலும் அறிய

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

பருவ நிலை மாற்றம் போன்ற காரணங்களால் இரு போக நெல் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

இந்தியாவின் பெரும்பாலான நீர்த்தேவையை பூர்த்தி செய்வதில் தென்மேற்கு பருவமழை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  முக்கிய மழை பருவமான, தென் மேற்கு பருவ மழை வழியாகவே, நாடு முழுவதுக்கும் தேவைப்படும் நீரின் அளவு பெரும்பாலும் பூர்த்தியாகிறது. வேளாண்மை மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், தென் மேற்கு பருவ மழையையே நம்பியுள்ளன. தென் மேற்கு பருவமழையால் கேரள, கர்நாடக மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் அதிகமாக பலன் பெற்றாலும், இந்த இருமாநிலங்களிலும் பெய்யும் மழையானது ஆறுகள் வழியாக தமிழ்நாட்டை வந்தடைகின்றன. இந்த ஆண்டுக்கான மழை நிலவரம் குறித்த, நீண்ட கால கணிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்து இருந்தது அதன்படி, ஜூன் ஒன்றாம் தேதி தென் மேற்கு பருவ மழை துவங்கும் என்றும், ஆகஸ்ட் மாதம் வரை பொழியும் தென்மேற்கு பருவமழையானது இயல்பான அளவில் இருக்கும் என கணித்திருந்தது. 

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

தென்மேற்குப் பருவ மழை வாயிலாகத்தான் தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் நீரின் தேவை பூர்த்தியாகிறது எனலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால், விவசாயம் செழிப்பதுடன், முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை,  சோத்துப்பாறை அணை என பல அணைகளும், ஏரி,  குட்டை, குளம் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழியும்.  கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் தேதி தொடங்கும். ஆனால் இந்தாண்டு காலநிலை மாறி முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கியது. 

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

இந்த தென்மேற்குப் பருவமழையின் மூலம், தேனி மாவட்டத்திலுள்ள அணைகள் நிரம்பும். இதனை நம்பி தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்வர். ஆனால் சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை, சற்றுக் காலநிலை மாறி மாறி மழை பெய்து வருவதால், தேனி மாவட்ட விவசாயிகள்,  அதிலும் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இருபோகம் நெல் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

முறையான மழைப்பொழிவு இல்லாததாலும் முல்லைப் பெரியாறு அணையில் உரிய நீர்த் தேக்கத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தாமல் இருப்பதும், இதற்கு காரணமாக தெரிவிக்கின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீதிமன்ற உத்தரவுபடி 142 அடி உயர்த்த வேண்டும் என்ற ஆணை உள்ளது.  ஆனால் அம்மாநில அரசு அதனை பொருட்படுத்தாமல், 138 அடி  வரை மட்டுமே அம்மாநில அரசு அதிகபட்சமாக நீர்மட்டத்தை வைத்துள்ளது. அணையின் நீர்மட்டம் 138 அடி நெருங்கியதும்,  அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும். இதனால் தேவையான நேரத்தில் இரு போகம் நெல் சாகுபடி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்.

உயர்த்தப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தேனி விவசாயிகள்...!

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், " கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரதானமாக நெல் விவசாயமே உள்ளது. நெல் விவசாயத்தில் நீரின் பங்கு இன்றியமையாதது. முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டம் தேவையான அளவு உயர்த்தாமல் இருப்பதும்,  பருவநிலை மாற்றத்தால் மழை அளவு குறைந்துள்ளதாலும், மற்றும் உரம் விலை உயர்வு, தேவையான நெல் ரகத்தை தேர்ந்து எடுப்பதில் சிக்கல், வியாபாரிகள் மூலம் உரிய விலை கிடைக்காமல் இருப்பது, போன்ற பல சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்தை கைவிடும் நிலையிலும்  அல்லது ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யக் கூடிய ஒரு அவல நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். எனவே தமிழக அரசு முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்யவும், தேவையான நேரத்தில் அணையில் இருந்து நீர் திறந்து விடவும் கோரிக்கை வைத்துள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget