மேலும் அறிய

''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!

தமிழக அரசால் இன்று வெளியான வேளாண் பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு எந்த வளர்ச்சி திட்ட நிதி அறிவிப்பு இல்லை என விவசாயிகள்

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி கடந்த அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமர்ந்தது. இதனை அடுத்து தி. மு. க தலைமையில் தமிழகத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில்  தாக்கல் செய்தார். இது தமிழக சட்டசபை வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் காகிதமில்லா பட்ஜெட்  அதாவது இ-பட்ஜெட் ஆகும்.

'இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!

இந்த நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சென்னை , திருச்சி , கோவை , சேலம் , திருப்பூர் என ஒரு சில மாவட்டங்களில் வேளாண் வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.  ஆனால் தென் மாவட்டங்களில் வேளாண்மை வளர்ச்சி குறித்து எந்தவித ஒரு அறிவிப்பு இல்லாதது  தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்பாக தேனி மாவட்டம்  கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிச்செட்டிபட்டி வரையில் சுமார் 14707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் வருடத்திற்கு இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருவ நிலை மாற்றம் கால சூழலுக்கு ஏற்ற விதை நெல் இல்லாத நிலையில் தற்போது ஒரு போகம் நெல் விவசாயம் செய்யும் சூழலுக்கு வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்கும் தேனி , திண்டுக்கல் , சிவகங்கை, ராமநாதபுரம் , மதுரை உள்ளிட்ட மக்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது குறித்த எந்தவித ஒரு அறிவிப்பும் இல்லாத நிலை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் மொத்தமாக ஆறுகள் , குளங்கள் , ஏரிகள் என தூர் வார 250 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியான நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையை தூர் வார தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறுகின்றனர்.


'இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!

அதே போல் 100 நாள் வேலைத்திட்டம் என்பது 150 நாளாக உயர்த்தப்பட்டது யாருக்கும் பயனற்றது எனவும் தெரிவிக்கின்றனர், காரணம் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்பதும் இது போன்ற திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடுவதைவிட பயனுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் தமிழக அரசின் நிதி வீன் விரயம் ஆகாது எனவும் கூறுகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கை சுற்றி திராட்சை , வாழை , தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் செய்வதால் இந்த பகுதியில் பதப்படுத்தும் தொழிற்சாலை நிறுவ வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

'இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!

தற்போது வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் இது போன்ற அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள். மேலும் பெரியகுளம் , கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக விளையும் மதிப்புக்கூட்டும் பொருளாக பார்க்கப்படும் வாழை , மா உள்ளிட்ட விவசாயங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும்  ஒட்டுமொத்தத்தில் இன்று வேளாண் திட்டங்களுக்கு குறித்து வெளியான பட்ஜெட் தென் மாவட்ட மக்களின் குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget