மேலும் அறிய

தொடர்ந்து அதிகரிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் : மதுரை, திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி..!

தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு குடி நீர் மற்றும் விவசாயத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களுக்கு குடிநீருக்கான தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பு. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வைகை ஆறு செல்லும் வழியில் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணை, இந்த அணை மூலம் மதுரை மாவட்டம் ,திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கான விவசாய தேவைக்கான நீரையும் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் தேவைக்கும் இந்த அணையின் நீரைக்கொண்டே பயன்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் :  மதுரை, திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி..!

அணையின் மொத்த நீர்பிடிப்பு பகுதியானது 111 அடி உயரம் கொண்டது.  இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் 71 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும். கடந்த மாதத்தில் டவ்தே புயல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கொட்டக்குடி ஆறு, போடிமெட்டு, குரங்கணி போன்ற மலையடிவார பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் நீரானது நேரடியாக வைகை அணையை சென்றடைந்து அணையில்  நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. நீண்ட மாதங்களாக வைகை அணையில் 61 அடிக்கு மேல் நீர்த்தேக்கம் இல்லாமல் இருந்த வந்தநிலையில்,  டவ்தே புயலின் போது பெய்த கனமழை எதிரொலியால் சில நாட்களிலேயே நீர்மட்டமானது உயரத் தொடங்கியது. இதனடிப்படையில் தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனத்திற்கு, 45,041 ஏக்கர் பரப்பளவு நிலங்களுக்கு தேவையான தண்ணீரானது வினாடிக்கு 900 கன அடி வீதம் வைகை அணையிலிருந்து 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் வரும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீரானது திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து அதிகரிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் :  மதுரை, திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி..!

இதனால் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் இரு மாவட்ட பகுதி விவசாயத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்து தற்போது வரை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்கும், குடி நீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டதால் முல்லை பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும்  தண்ணீர் வைகை அணையையும் சென்றடையும். இதனால் வைகை அணையில் தொடர்ந்து நீர் மட்டம் குறையாமல் இருந்து வருகிறது. இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆதலால் திண்டுக்கல், மதுரை இரண்டு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால்  வைகை அணைக்கு கூடுதல் நீர் வரத்து வரத்தொடங்கியதாலும் தற்போது அனையில் நீர்மட்டமானது 67.03 அடியாக உள்ளது. அணையில் வினாடிக்கு 483 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
Embed widget