மேலும் அறிய

பழனி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நடந்தது என்ன..? - மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் விளக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பு 16 தோட்டாக்கள் கண்டெடுத்த போலீசார் விசாரணையில் துப்பாக்கிச்சூடு கவனக்குறைவால் நடந்த விபத்து என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேட்டி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சில் துப்பாக்கி தோட்ட பாய்ந்த நிலையில் கார்த்தி என்பவர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற பெத்தநாயக்கன்பட்டி தோட்டத்தில் விசாரணை நடத்தினர்‌. அப்போது தோட்டத்து சாலையில் இருந்து 16 ஏர்கன் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

TN Electricity Board : அப்போ 60 கால்ஸ்.. இப்போ 75 கால்ஸ்.. தமிழ்நாடு மின்வாரியம் அளித்த அதிரடி அறிவிப்பு..

பழனி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நடந்தது என்ன..? -  மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் விளக்கம்

இதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த கும்பகோணத்தை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிர்பாராத விபத்து. துப்பாக்கி தோட்டா பாய்ந்த கார்த்தி மற்றும் மோகன்ராஜ் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்., மோகன்ராஜ்க்கு சொந்தமான ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை  பயன்படுத்திய பொழுது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து கார்த்தியின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்தது.

TET appointment: அதிரடி அறிவிப்பு.. ‘இவர்களுக்கெல்லாம் டெட் தேர்வு தேவையில்லை’- பள்ளிக்கல்வித்துறை அப்டேட் இதுதான்..

பழனி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நடந்தது என்ன..? -  மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் விளக்கம்

இந்த உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்து, யாரோ சுட்டதாக பொய்யான தகவலை போலீசாரிடம் தெரிவித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி லைசென்ஸ் தேவையில்லாத துப்பாக்கி. சாதாரண விளையாட்டு துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளனர்” என தெரிவித்தார். இதையடுத்து மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் பழனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாகவும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி மீது இரு கொலை வழக்குகள் பதியப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Rambha car accident: ‛அடக்கடவுளே... பாதுகாப்பா இரு ரம்பா...’ அடுத்தடுத்து ஆறுதல் கூறும் மீனா... சினேகா மற்றும் பலர்!
பழனி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நடந்தது என்ன..? -  மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் விளக்கம்

தற்பொழுது துப்பாக்கியை கவனக்குறைவாக பயன்படுத்தி ஒருவரை காயம் செய்ததாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளதாகவும்,மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்று முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். பேட்டியின் பொழுது ஏடிஎஸ்டி சந்திரன் பழனி டிஎஸ்பி சிவசக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
Embed widget