மேலும் அறிய

அடிப்படை வசதிகளுக்காக அரை நூற்றாண்டாக காத்திருப்பு.. போடி சோலையூர் பழங்குடி இன மக்களின் சோகம்!

தேனி மாவட்டம் போடி அருகே சோலையூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள், அரை நூற்றாண்டுக்கு மேலாக அடிப்படை வசதிகளின்றி தவிப்பு

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சோலையூர் கிராமம் போடி நகர் பகுதியிலிருந்து வடக்கு புறமாக 10 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி பழங்குடி இன மக்கள் மட்டும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மண் குடிசை , தகர வீடுகளில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடிப்படை வசதிகளுக்காக அரை நூற்றாண்டாக காத்திருப்பு.. போடி சோலையூர் பழங்குடி இன மக்களின் சோகம்!

இக்கிராமத்தில் இருக்கும் பழங்குடி இன மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காடு, தோட்டங்களில் கூலி வேலை பார்த்து கொண்டு அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு தினக்கூலியாகவே தற்பொழுது வரை வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான குடும்பங்களுக்கு மனைப்பட்டா இல்லாமல் இருப்பதால் ஒரே வீட்டில் 5 குடும்பங்கள் வசித்துவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல குடும்பங்கள் ரேஷன் அடையாள அட்டை இல்லாமலும், தெரு, சாக்கடை வசதி இல்லாமலும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

அடிப்படை வசதிகளுக்காக அரை நூற்றாண்டாக காத்திருப்பு.. போடி சோலையூர் பழங்குடி இன மக்களின் சோகம்!

மேலும் இக்கிராம மக்கள்  இந்த நவீன 21-ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் உலகத்திலும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் உப்பு நீரான ஆற்று நீரையே குடித்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வரும் நீரை அருந்துவதால் ஒவ்வாமை, சிறு நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். கோடை காலங்களில் ஆற்றில் நீர் வற்றும் காலத்தில் காலி குடங்களை எடுத்துக்கொண்டு 5 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் எடுக்கச்செல்லும் அவல நிலை இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கு என பொதுக்கழிப்பிட வசதி கூட இந்த இன மக்களுக்கு கிடையாது. இதுகுறித்து அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தும் கண்டு கொள்ளவில்லை.

அடிப்படை வசதிகளுக்காக அரை நூற்றாண்டாக காத்திருப்பு.. போடி சோலையூர் பழங்குடி இன மக்களின் சோகம்!

அவசர காலங்களில் மருத்துவமனை செல்ல வேண்டுமானால், 10 கி.மீ.தூரம் நடந்து அல்லது இரண்டு சக்கர வாகனத்தில்தான் சென்றுவர வேண்டும். இத்தகைய காரணத்தினால் நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் மினி பஸ் வசதி வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்த வண்ணமே உள்ளனர்.


அடிப்படை வசதிகளுக்காக அரை நூற்றாண்டாக காத்திருப்பு.. போடி சோலையூர் பழங்குடி இன மக்களின் சோகம்!

ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு,சோலையூர் பழங்குடி மக்களின் உடல் மற்றும் பொது நலன் கருதி பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் , பொதுக்கழிப்பிட வசதி போன்ற கிராம அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய துரித நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

*தமிழர்களின் மூத்த தேவி வழிபாடு வரலாற்று கோவில் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்*

திண்டுக்கல் : கி.பி.11-ஆம் நூற்றாண்டை சோ்ந்த மூத்த தேவி கோவில்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Embed widget