மேலும் அறிய

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!

’’மாணவர்கள் எவ்வித அச்சமின்றி பள்ளிகளுக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அறிவுரைப்படி நன்றாக படித்து பயன்பெற வேண்டும்'’

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில்  பள்ளிகளில் 9,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு திறக்கப்பட்டது. இன்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பாடம் எடுக்கப்பட்டுவரும் நிலையில் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் வகுப்பறைக்குள் சென்று ஆசிரியர்கள் பாடம் எடுப்பது குறித்து கேட்ட ஆட்சியர் அங்கிருந்த மாணவர்களுக்கு தமிழ் இலக்கண பாடம் எடுத்தார்.

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவுரைப்படி  மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 71 அரசு உயர்நிலை பள்ளிகளும் 71 அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகளும், 89 அரசு மேல்நிலை பள்ளிகளும், 69 அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளும், 87 மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளும், 28 சுயநிதி பள்ளிகளும் என 415 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்களுக்கு பாடம் எடுக்க 5,443 ஆசிரியர்கள் பணியில் உள்ளார்கள். 

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!
 
செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு பணிக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!
 
நீண்டநாட்களுக்கு பின் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்கள் வருகை புரிவதால் ஒரு வாரகாலத்திற்கு அடிப்படை கல்வி வழங்கப்பட்டு பாடப்பிரிவிற்கு ஏற்ப வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்களும் இடைப்பட்ட காலத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் படித்திருப்பீர்கள். அதற்குரிய விளக்கங்களை ஆசிரியர்களிடம் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஆரம்பக்காலத்தில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஆசிரியர்கள் மாணவியர்களின் பெற்றோர்களுடன் நேரடியாக கலந்தாலோசனை கூட்டம் மாணவர்களின் கல்விக்கு தூண்டுகோலாக இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல், அனைத்து மாணவ, மாணவியர்களுக்கான அரசு விடுதிகளில் தனித்துணை ஆட்சியர் நிலை கொண்ட தனித்தனி அலுவலர் நியமித்து விடுதிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கண்காணிப்பதுடன், விடுதிகளுக்கு தேவையான கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கும் வகையில் அலுவலர்கள் பணி மேற்கொள்வார்கள். விடுதிக்காப்பாளர்கள், அலுவலர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதியுடன் கண்காணித்து செயல்படுவார்கள். மாணவர்கள் எவ்வித அச்சமின்றி பள்ளிகளுக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அறிவுரைப்படி நன்றாகப் படித்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
 

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget