மேலும் அறிய

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!

’’மாணவர்கள் எவ்வித அச்சமின்றி பள்ளிகளுக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அறிவுரைப்படி நன்றாக படித்து பயன்பெற வேண்டும்'’

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில்  பள்ளிகளில் 9,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு திறக்கப்பட்டது. இன்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பாடம் எடுக்கப்பட்டுவரும் நிலையில் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் வகுப்பறைக்குள் சென்று ஆசிரியர்கள் பாடம் எடுப்பது குறித்து கேட்ட ஆட்சியர் அங்கிருந்த மாணவர்களுக்கு தமிழ் இலக்கண பாடம் எடுத்தார்.

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவுரைப்படி  மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 71 அரசு உயர்நிலை பள்ளிகளும் 71 அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகளும், 89 அரசு மேல்நிலை பள்ளிகளும், 69 அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளும், 87 மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளும், 28 சுயநிதி பள்ளிகளும் என 415 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்களுக்கு பாடம் எடுக்க 5,443 ஆசிரியர்கள் பணியில் உள்ளார்கள். 

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!
 
செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு பணிக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கையில் மாணவர்களுக்கு தமிழ்பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி...!
 
நீண்டநாட்களுக்கு பின் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்கள் வருகை புரிவதால் ஒரு வாரகாலத்திற்கு அடிப்படை கல்வி வழங்கப்பட்டு பாடப்பிரிவிற்கு ஏற்ப வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்களும் இடைப்பட்ட காலத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் படித்திருப்பீர்கள். அதற்குரிய விளக்கங்களை ஆசிரியர்களிடம் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஆரம்பக்காலத்தில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஆசிரியர்கள் மாணவியர்களின் பெற்றோர்களுடன் நேரடியாக கலந்தாலோசனை கூட்டம் மாணவர்களின் கல்விக்கு தூண்டுகோலாக இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல், அனைத்து மாணவ, மாணவியர்களுக்கான அரசு விடுதிகளில் தனித்துணை ஆட்சியர் நிலை கொண்ட தனித்தனி அலுவலர் நியமித்து விடுதிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கண்காணிப்பதுடன், விடுதிகளுக்கு தேவையான கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கும் வகையில் அலுவலர்கள் பணி மேற்கொள்வார்கள். விடுதிக்காப்பாளர்கள், அலுவலர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதியுடன் கண்காணித்து செயல்படுவார்கள். மாணவர்கள் எவ்வித அச்சமின்றி பள்ளிகளுக்கு வருகை தந்து ஆசிரியர்கள் அறிவுரைப்படி நன்றாகப் படித்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
 

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget