மேலும் அறிய

Pugar Petti: ஏசி பார் இயங்க துணைப்போகும் அதிகாரிகள்... கட்டுக்கட்டாக கை மாறுகிறதா பணம்? பாயுமா நடவடிக்கை?

அதிகாரிகள் சிலர் இதற்கு ஆதரவாக துணை போவதாகவும். அதற்கு கட்டுக்கட்டாக பணமாகவும், ஜி.பே., போன்பே போன்ற ஆன்லை மூலமும் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியில் அரசு டாஸ்மாக் மற்றும் தனியார் ஏசி பார் இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு சென்று வந்த போதை ஆசாமி ஒருவர் முசாபர் கனி என்ற 40 வயதுடைய நபரை விபத்துக்குள்ளாக்கி சென்றுவிட்டார். இதையடுத்து காயமடைந்த முசாபர் கனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் போராட்டமாக வெடிக்க டாஸ்மாக் கடையை அதிகாரிகள் தற்காலிகமாக மூடினர்.

Pugar Petti: ஏசி பார் இயங்க துணைப்போகும் அதிகாரிகள்... கட்டுக்கட்டாக கை மாறுகிறதா பணம்? பாயுமா நடவடிக்கை?
ஆனால் நேரு பஜாரில்  செவன் ஸ்டார் என்ற பெயரில் இயங்கும் ஏ.சி., பார் விதிகளை காற்றில் பறக்கவிட்டு இயங்குவதாக பல்வேறு புகார்கள் வாசிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தனியார் ஏ.சி., பாரையும், டாஸ்மாக் கடையையும் நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு மட்டும் பெரிய பூட்டாக போட்டவர்கள் தனியார் பார் பிரச்னை தங்கள் பார்வைக்கே வராதது போல் சுதந்திரம் கொடுத்தனர். இதையடுத்து அ.தி.மு.க., சிவகங்கை நகரச்செயலாளர் என்.எம் ராஜா பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தனியார் பாரை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து தனியார் பாரை திறக்க மாட்டோம் என கலால் அதிகாரிகள் தெரிவித்த பின் கலைந்து சென்றனர். இந்நிலையில் முன்பக்கம் இயங்கிய பாரை பின் வாசல் வழியாக கடையை இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Pugar Petti: ஏசி பார் இயங்க துணைப்போகும் அதிகாரிகள்... கட்டுக்கட்டாக கை மாறுகிறதா பணம்? பாயுமா நடவடிக்கை?
 
 
இது குறித்து அ.தி.மு.க., நகர் செயலாளர் என்.எம்.ராஜா நம்மிடம் ...," நேரு பஜாரில் டாஸ்மாக் கடையும் தனியார் ஏ.சி.,பாரும் இயங்கி வந்தநிலையில் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனால் தனியார் பாரை மூடுவதற்கு முயற்சிக்காமல் அதிகாரிகள் பொறுப்பற்று பதில் தெரிவித்தனர். இதையடுத்து கடையை தற்காலிகமாக மூடியுள்ளனர். சம்மந்தப்பட்ட ஏ.சி., பாரில் ஏற்கனவே அடிதடி தகராறு உள்ளது. இதனால் சம்மந்தப்பட்ட பாரை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தும் கூட அதை உடனடியாக திறந்து செயல்படுத்தி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடை மற்றும் தனியார் பாரை  நிரந்தரமாக மூடி வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
 

Pugar Petti: ஏசி பார் இயங்க துணைப்போகும் அதிகாரிகள்... கட்டுக்கட்டாக கை மாறுகிறதா பணம்? பாயுமா நடவடிக்கை?
இது குறித்து கலால் உதவி ஆணையார் ரத்னவேலை தொடர்பு கொண்டு பேசுகையில்..," இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கடை ஒரு வாரத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால் அந்த மதுபான கடையில் உரிமையாளர் பெயர் மற்றும் அதனைப் பற்றிய தகவல் தர முடியாது என மறுத்துவிட்டார்.
 
சிவகங்கை நேரு பஜாரில் இயங்கும் ஏ.சி., பார் பல்வேறு விதிகளை மீறி செயல்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் சிலர் இதற்கு ஆதரவாக துணை போவதாகவும். அதற்கு கட்டுக்கட்டாக பணமாகவும், ஜி.பே., போன்பே போன்ற ஆன்லை மூலமும் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பிரச்னையில் தலையிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Cauvery river: குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு
குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு
Tata Cars: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய காரை களமிறக்கும் டாடா - கூடவே வரும் 2 அப்டேடட் வெர்ஷன்கள், விவரம் உள்ளே
Tata Cars: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய காரை களமிறக்கும் டாடா - கூடவே வரும் 2 அப்டேடட் வெர்ஷன்கள், விவரம் உள்ளே
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Embed widget