மேலும் அறிய

சீமானை இந்நேரம் உள்ள பிடிச்சு போட்டிருக்க வேண்டாமா..? - செல்லூர் ராஜூ காட்டம் !

வேங்கை வயல் விவகாரத்தில் தி.மு.கவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதனை மூடி மறைக்கவே ஊரைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - செல்லூர் ராஜூ பேட்டி.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழன்னை சிலைக்கு மரியாதை

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில், அ.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும்.
 

பெரியார் நினைவிடத்தில் நாடகம்

 
தந்தை பெரியார் நினைவிடத்திற்கு செல்லக்கூடிய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது தான் இதுவெல்லாம் நாடகம் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தமிழுக்காக அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியுள்ளனர். கோவையில் கலைஞர் செம்மொழி மாநாடு நடத்தினார். அதில் தமிழ் அறிஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி போராடினார்.
 

டங்ஸ்டன் திட்டம்

டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என பத்து மாதமாக முதலமைச்சர் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. 10 மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூப்பறிக்க சென்றார்களா?, 10 மாதங்களாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் தூங்கிக் கொண்டிருந்தார்களா?, சட்டமன்றத்தில் 2 மணி நேரமாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அதிமுகவும் போராடியதை அடுத்த தான் முதலமைச்சர் விழித்துக் கொண்டு எதிர்கிறோம் என கூறினார். இனிவரும் ஒரு ஆண்டு முழுவதும் திமுகவின் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  மக்களை ஏமாற்றுவதற்காக திமுக பல்வேறு வேஷங்களை போடும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மாய, மந்திர பெட்டிகளை வைத்துக்கொண்டு வெற்றி பெற்றார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அடித்து சொல்கிறேன் 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராது.
 

தி.மு.கவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நாடக நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் மிக விழிப்போடு உள்ளனர்.  திமுகவை நம்பி செல்லும் கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தி.மு.கவை நேற்று வரை ஆதரித்த இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேங்கை வயில் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என பேசுகிறது. வேங்கை வயல் விவகாரத்தில் தி.மு.கவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதனை மூடி மறைக்கவே ஊரைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget