மேலும் அறிய

ராமேஸ்வரம் கோயிலில் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட புனித தீர்த்த கிணறுகள்

’’கடந்த சில மாதங்களில் வெளிமாநில பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்திருந்தது. தற்போது தடை விலக்கி கொள்ளப்பட்டதால் இனிவரும் காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர் என எதிர்ப்பு’’

கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து  அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளிலும் தற்போது நீராடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர்  22 புனித தீர்த்த கிணறுகளில்  நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.கொரானா பரவல் காரணமாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. கொரானா பரவல் குறைந்ததையடுத்து கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி   முதல் பக்தர்கள்  கோவிலுக்குள் நேரடியாக சாமி தரிசனம் செய்யவும்அடுத்து  கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்தது.  ஆனால், ராமேஸ்வரம்  ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை நீட்டித்தது. இதனால்,  சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக, பொழுதுபோக்கு கேளிக்கை மற்றும்  சுற்றுலா தளங்களை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித தீர்த்த கிணறுகளில்  நீராட அனுமதி கொடுக்க மறுப்பதை கண்டித்து, அதிமுக, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


ராமேஸ்வரம் கோயிலில் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட புனித தீர்த்த கிணறுகள்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று முதல் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரானா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனாவின் தாக்கம்  படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து, ஜூலை 5 முதல் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கும், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடவும் மட்டமே அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்ககப்படவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தடை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது.


ராமேஸ்வரம் கோயிலில் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட புனித தீர்த்த கிணறுகள்

தமிழக அரசு உடனடியாக ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புண்ணிய தலத்தில் புனித தீர்த்தங்கள் திறக்கப்பட்டால் மட்டுமே ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும்  பக்தர்கள் வந்தால் மட்டுமே  கோவில்களில் புனித தீர்த்தத்தில் இறைத்து ஊற்றும் தனியார் பணியாளர்கள் மற்றும் ராமேசுவரம் கோவிலை சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் ராமேசுவரம் பகுதியில் அமைந்துள்ள 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள்,  500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் புரோகிதர்கள் என 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மேலாக இங்கு வரும் பக்தர்களை நம்பி வாழ்ந்து வரும் நிலை இருக்கிறது.


ராமேஸ்வரம் கோயிலில் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட புனித தீர்த்த கிணறுகள்

இந்த தடையை நீக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று ராமேசுவரம் கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி முதல் 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடலாம். ராமேசுவரம் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருவர். 22 தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்காததால் கடந்த சில மாதங்களில் வெளிமாநில பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்திருந்தது. தற்போது தடை விலக்கி கொள்ளப்பட்டதால் இனிவரும் காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
விருதுநகரில் நீச்சல் பயிற்சி: 2026 கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு!
விருதுநகரில் நீச்சல் பயிற்சி: 2026 கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றம் கோலாகலம்! இலவச தரிசனம் அறிவிப்பு, பக்தர்கள் உற்சாகம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றம் கோலாகலம்! இலவச தரிசனம் அறிவிப்பு, பக்தர்கள் உற்சாகம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
Tata Altroz iCNG Review: கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
Embed widget