மேலும் அறிய

ஐயப்ப பக்தர்களுக்கு கவலை வேண்டாம்! பிஎஸ்என்எல் கொடுத்த ஜாக்பாட்.. சபரிமலையில் 4ஜி

BSNL சார்பில் இலவச வைபை வசதி அளிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக 41நாள்கள் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகை வந்து செல்கின்றனர்.


ஐயப்ப பக்தர்களுக்கு கவலை வேண்டாம்! பிஎஸ்என்எல் கொடுத்த ஜாக்பாட்.. சபரிமலையில் 4ஜி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. ஜனவரி 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் சாமி ஐயப்ப தரிசனத்திற்காக  சபரிமலையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. 

இதையும் படிங்க : WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்

சபரிமலை ஐயப்பன் கோவில் மிகுந்த அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு  வசதிகள் குறைந்தே இருந்து வந்தது. நவீன கால தொடக்கத்திலிருந்து வனப்பகுதிகளில் செல்வதற்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோயில் மற்றும் கேரள அரசின் நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு நடை பயணமாக செல்லும் சூழல் உள்ளதால் செல்போன் இணைப்புகளுக்கான சிக்னல் வசதிகள் பெரும்பாலும் இல்லாத நிலையே தற்போது வரையில் உள்ளது.


ஐயப்ப பக்தர்களுக்கு கவலை வேண்டாம்! பிஎஸ்என்எல் கொடுத்த ஜாக்பாட்.. சபரிமலையில் 4ஜி

பம்பையிலிருந்து செல்லும் பக்தர்களும் சரி, வண்டிப்பெரியார் சென்று பெரும்பாதை காட்டுப்பகுதியிலிருந்து செல்லும் பக்தர்களும் சரி தாங்கள் பெரிதும் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இருக்க கூடியது  தகவல் தொடர் வசதி. அடர்ந்த வனப்பகுதி என்பதால் தனியார் செல்போன் டவர்கள் இருப்பதில் வாய்ப்பு இல்லாததால்  BSNL செல்போன் டவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் செல்போன் சிக்னல்கள் சரி வர எடுப்பதில்லை. இந்நிலையில்  சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4ஜி சேவையை BSNL நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. சபரிமலையில் குழுவாக செல்பவர்கள் பிரிந்து சென்றாலோ அல்லது ஏதேனும் அவசர உதவிக்கு தேவைப்பட்டு குழுவில் தங்களுடன் வந்தவர்களை தொடர்பு கொள்வது, போன்றவற்றில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இதையும் படிங்க : Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க


ஐயப்ப பக்தர்களுக்கு கவலை வேண்டாம்! பிஎஸ்என்எல் கொடுத்த ஜாக்பாட்.. சபரிமலையில் 4ஜி

சில ஆண்டுகளாக BSNL சார்பில் இலவச வைபை வசதி அளிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது. இது மகர விளக்கு பூஜைக் காலத்தில் உதவியாக இருக்கும் எனவும் இந்த இணைய சேவைகளின் நிதியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
மதுரை ஹோட்டலில் ஒரு ரவா தோசை ரூ.189... மேலும் டிப்ஸ், ஜிஎஸ்டி என வாடிக்கையாளருக்கு பில் ஷாக்!
மதுரை ஹோட்டலில் ஒரு ரவா தோசை ரூ.189... மேலும் டிப்ஸ், ஜிஎஸ்டி என வாடிக்கையாளருக்கு பில் ஷாக்!
சிவகங்கை: சோழபுரத்தில் 13ம் நூற்றாண்டு சிங்க ஆசிரியம் கல்வெட்டு - புதிய வரலாறு!
சிவகங்கை: சோழபுரத்தில் 13ம் நூற்றாண்டு சிங்க ஆசிரியம் கல்வெட்டு - புதிய வரலாறு!
மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!
மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget