மேலும் அறிய

ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

’’நெறைய கெடச்சா பொரிச்சு சாப்புடுவோம் இல்லைன்னா சும்மா ஒரு கத்திரிகாய் போட்டு சமைத்து சாப்புடுவோம். வீட்டுக்குப்போக மீதி உள்ளதை விலைக்கு கொடுத்து விடுவோம்"

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி  தாலுகாவில் உள்ளது   வாலிநோக்கம்  கடற்கரை கிராமம்.  அங்கு கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கடற்கரைக்கு  செல்லும் வழியில் அமைந்துள்ள தரவைக்காட்டில் உள்ள சதுப்பு நிலத்தில் பாலையாறு   செல்கிறது. இப்பகுதியில் கடல்நீரும், ஆற்று நீரும் சங்கமிக்கும் பகுதியில் கையால் இறால் மீன் பிடிக்கும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இது ஒருவகையான பொழுதுபோக்கு என கூறும் அப்பகுதி பெண்கள்,  இப்படி பிடிக்கப்படும் இறால் மீன்கள் வீட்டிற்கு தேவையானது போக விற்பனை செய்யப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது என்கின்றனர்.


ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

இந்த வகை மீன்பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கையால் இறால் பிடிக்கும்போது, பெரும்பாலும் கடல் உள்வாங்கும் நேரத்தில்தான் அதிக அளவில் இப்படி இறால் பிடிக்க செல்கிறார்கள்.மேலும், ஆற்றின் தாழ்வான பகுதிகளில், கால்களை மடக்கி முட்டிபோட்டு நீருக்குள் தவழ்ந்தபடி, இரு கைகளால் இறால்களை தடவிப் பிடிக்கின்றனர். இவர்கள், பழைய முறைப்படி 'பரி' என்று அழைக்க கூடிய பனை ஓலையால் பின்னப்பட்ட கூடை மற்றும் துணிப் பைகளை தலையில் கட்டி பின்பக்கமாக தொங்கவிட்டு கொள்கின்றனர். சுமார் 5 நபர்களுக்கு மேல் அதிகபட்சமாக 10 நபர்கள் வரிசையாக தண்ணீரில் இறங்கி உட்கார்ந்து, கழுத்தளவு ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டு இரண்டு கைகளால் தண்ணீருக்குள் தடவியபடி தண்ணீருக்கு அடியில் இறால் மீனை தேடி பிடிக்கிறார்கள். அப்போது, அவர்களின் கையில் தட்டுப்படும் இறாலை பிடித்து கூடைப்பையில் போட்டுக்கொள்வர்கள். இந்த முறையில் பெரும்பாலும் கூனி என அழைக்கப்படும் வெள்ளை நிறத்திலான சிறிய வகை இறால்களே அதிகம் கிடைக்கும்.

ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

ஆனால், அதிருஷ்டம் இருந்தால் சில நேரங்களில் கூடுதல் விலை போகும் கருப்பு நிற இறால் வகைகளும் கிடைப்பது உண்டு. பொதுவாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப்படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பல நேரங்களில் கையால் தடவி இறால் பிடிக்கும்போது நண்டுகள் கடித்து விடுவதும், உடைந்த கண்ணாடி துகள்களும் (பீங்கான்)  வெட்டி பெரும் காயங்கள் ஏற்படுவதும் உண்டு என்கின்றனர் இந்த கிராம மீனவ பெண்கள். கழுத்து அளவு தண்ணீரில் நீந்தி கொண்டு இறால் மீன் பிடித்து கொண்டிருந்த ராமுத்தாய்  நம்மிடம் பேசியபோது, “நாங்க மேலக்கிடாரத்திலிருந்து  வருகிறோம். ஒரு நாளைக்கு அரை கிலோவும் பிடிப்போம், ஒரு கிலோவும் பிடிப்போம். ஏன் ரெண்டு கிலோ கூட பிடிப்போம். கையில தட்டுறதுக்கு தக்கன இருக்குறத கையில தடவி தான் பிடிப்போம். இது வெஞ்சனத்துக்கு ஆகும் கறிக்கு ஆகும். எங்க நேரத்துக்கு நெறைய கெடச்சா பொரிச்சு சாப்புடுவோம் இல்லைன்னா சும்மா ஒரு கத்திரிகாய் போட்டு சமைத்து சாப்புடுவோம். வீட்டுக்குப்போக மீதி உள்ளதை விலைக்கு கொடுத்து விடுவோம். " என்றார்.


ராமநாதபுரத்தில் அனாயசமாக கைகளால் இறால் மீன் பிடிக்கும் பெண்கள்...!

மேலும் தாங்கள் தினமும் வருவதில்லை அமாவாசை சமயத்தில் மட்டும் ஐந்து அல்லது ஆறு பேராக வந்து மீன் பிடிப்பதாக கூறும் இந்தப் பெண்கள், கடையில் வாங்கும் இறாலை காட்டிலும் கைகளில் பிடிக்கும் இறால்களுக்கு சுவை அதிகம் என்பதால் இதனை தங்களது விருப்பதிற்காக செய்வதாகவும், இறால் பிடிப்பதை தவிர்த்து, ஆடு மேய்பது, நூறு நாள் வேலைக்கு செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவதாகவும், மழை பெய்யும் நேரத்தில் தேங்கும் நீரை வெட்டி விடாமல் இருந்தால் எப்போதும் இங்கு கூனி பிடிக்கலாம் எனவும் கூறுகின்றனர். இந்த வகை மீன் பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கடலோர கிராமங்களில் வசிக்க கூடியவர்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகளாக இருக்கிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget