மேலும் அறிய

பழனி கோவிலுக்குட்பட்ட நிலங்களை டெண்டர் விடுவதற்கு எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

பழனி கோவிலுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் விவசாய நிலத்தை பல ஆண்டுகளாக பராமரித்து வந்தவர்கள் கோவில் நிலங்களை டெண்டர் விடுவதை எதிர்த்து பழனி கோவில் தலைமை அலுவலகத்தில்  தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன‌. இந்த விவசாய நிலங்களை, நெல் குத்தகை மற்றும் பண குத்தகை ஆகியவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான குத்தகைதாரர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது வாரிசுதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் வேறுநபர்களுக்கு நிலத்தை உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும் புகார் வந்தது.


பழனி கோவிலுக்குட்பட்ட நிலங்களை டெண்டர் விடுவதற்கு எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

மேலும் குத்தகை தேதி முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் நிலத்தை ஒப்படைக்காமல் பயன்படுத்தி வருவது என பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலங்களை திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட நிலங்கள் நேற்று ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் நிலங்களை ஏலம் விடக்கூடாது எனக்கூறி 30க்கும் மேற்பட்ட  விவசாயிகள் பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பழனி கோவிலுக்குட்பட்ட நிலங்களை டெண்டர் விடுவதற்கு எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது: புதச்சு, அய்யம்புள்ளி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழனி கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதன்மூலம் பல ஆண்டுகளாக வாழ்க்கையை நடத்தி வருவதாகவும், இதுவரை  திருக்கோவிலுக்கு செலுத்தவேண்டிய நிலம் தொடர்பான குத்தகையை திருக்கோவில் நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனையின்படி‌ தவறாமல் ஆண்டு முழுவதும் செலுத்தி வருவதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் விவசாய நிலங்களை யாரும் உள்வாடகைக்கு விடவில்லை என்றும், அவ்வாறு உள்வாடகைக்கு விட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

பழனி கோவிலுக்குட்பட்ட நிலங்களை டெண்டர் விடுவதற்கு எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

இந்த விவசாய நிலங்களை மட்டுமே நம்பி பல ஏழைக்குடும்பங்கள் பிழைத்து வரும் நிலையில் தங்களை வெளியேற்றினால் நாங்கள் பிழைக்க வேறு வழி தெரியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்‌. எனவே நிலங்களை ஏலம் விடும் நடவடிக்கையை நிறுத்திவிட்டு, பல ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் தங்களுக்கே நிலத்தை குத்தகைக்கு விடவும், திருக்கோவில் நிர்வாகம் செலுத்த சொல்லும் குத்தகையை நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.


பழனி கோவிலுக்குட்பட்ட நிலங்களை டெண்டர் விடுவதற்கு எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

இது தொடர்பாக பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது உதவி ஆணையர் லட்சுமி விவசாயிகளை ஒருமையில் பேசியதும், மனுக்களை வாங்க மறுத்து அவமதித்ததும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாயிகளுக்கும் உதவி ஆணையர் லட்சுமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆவேசமடைந்த விவசாயிகளில் இருவர் தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் தீக்குளிக்க முயன்றவர்களை  தடுத்து தண்ணீர் ஊற்றி தடுத்து காப்பாற்றினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
Embed widget