மேலும் அறிய

தேனி தொட்டி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை - தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

’’தொட்டி பாலம் எவ்வளவு அழகு நிறைந்ததோ அதற்கேற்றார்போல் ஆபத்தும் நிறைந்தது. 40 அடி உயரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளதால், பாலத்தின் மேலே குதித்து விளையாடுபவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்’’

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் விவசாயத்தில் செழிக்கும் விதமாக, முல்லைப் பெரியாற்றில் தேவையான நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில், முல்லைப் பெரியாற்று தண்ணீரை பிரித்து கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகள் பயன் பெறவும்,  பாசன வசதி பெறவும், 2008ஆம் ஆண்டு 18ஆம் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில்  உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 18ஆம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த 18ஆம் கால்வாய் மூலம்  சுமார் 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. மேலும், இக்கால்வாய் தண்ணீரை உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரப்பி, நிலத்தடிநீரை பெருக்குவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 


தேனி தொட்டி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை - தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

முல்லைப் பெரியாறு அணையில் தேவையான நீர் மட்டம் இருக்கும் பட்சத்தில், தேனி மாவட்டம் மானாவாரி பயிர்கள் ஒரு போகம் பாசன வசதி பெற இந்த பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த 18ஆம் கால்வாயில் தண்ணீர் வரும் காலங்களில், கால்வாயை ஒட்டி உள்ள மக்கள் இந்த தண்ணீரில் குளித்து விளையாடி மகிழ்வது வழக்கம்.  மேலும், இந்த பதினெட்டாம் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதையான லோயர் கேம்பில் இருந்து கூடலூருக்கு செல்லும் வழியில் ஒரு பெரும் பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தை  தண்ணீர் கடந்து செல்வதற்காக ஒரு பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த பாலம் தொட்டிப் பாலம் என அழைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்தது.


தேனி தொட்டி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை - தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

சமீப காலத்தில் இந்த தொட்டிப்பாலம் மிகவும் பிரபலமடைந்து, வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும்  இங்கு குளித்து விளையாட மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த தொட்டி பாலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகிலும், சுரங்கனாரு அருவியின் அடிவாரத்தில் அமைந்துள்ளதாலும், இந்தத் தொட்டி பாலத்தில் இருந்து அருவியின் முழு அழகையும் ரசிக்க முடியும் என்பதாலும், மக்கள் அதிக அளவில் இங்கு வரத் தொடங்கினர். குறிப்பாக இளைஞர்கள் இங்கே பிறந்தநாள் விழா கொண்டாடுவது நண்பர்களுடன் சேர்ந்து  குளிப்பது, மற்றும் அங்கேயே சமையல் செய்து சாப்பிடுவது என ஒரு சுற்றுலாத்தலம் போல நினைத்து, அதிக அளவில் இங்கு வருகின்றனர். இந்த தொட்டி பாலம் எவ்வளவு அழகு நிறைந்ததோ அதற்கேற்றார்போல் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளது. 30 முதல் 40 அடி உயரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளதால், பாலத்தின் மேலே குதித்து விளையாடுபவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், இது மக்கள் குளித்து விளையாடுவதற்கான இடம் இல்லை என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு வந்தது. மேலும் காவல் துறையின் சார்பாக தொட்டிப் பாலத்திற்கு  சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டிருந்தது.


தேனி தொட்டி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை - தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

ஆனால் இந்தத் தடையை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து, தொட்டி பாலத்திற்கு வருகின்றனர். இதனால் பொதுப்பணித் துறை சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூடலூர்  காவல் நிலையத்தில் இருந்து, சார்பு ஆய்வாளர் முகுந்தன் தலைமையிலான காவல்துறையினர்,  தொட்டிப் பாலத்திற்கு விரைந்து வந்து அங்கு குளித்து விளையாடுபவர்களை, எச்சரித்தும்,  அபராதம் விதித்தும் அனுப்பினர். மேலும் தொட்டிப் பாலத்தில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ அனுமதி இல்லை என்ற எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டது.  தடையை மீறி தொட்டி பாலத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget