தேனி மாவட்டத்தில் நாளை மின் தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தேனி மாவட்டத்தில் நாளை டிசம்பர் 24, புதன்கிழமை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நாளை (டிசம்பர் 24, புதன்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. எந்தெந்த பகுதிகளில், எவ்வளவு நேரம் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் நாளை டிசம்பர் 24, புதன்கிழமை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடை பகுதிகள்:
தேனி மாவட்டத்தில், பெரியகுளம், காமாட்சிபுரம் மற்றும் வருசநாடு ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில், நாளை டிசம்பர் 24, புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மேற்கண்ட துணை நிலையங்களுக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளில் நாளை மின்சார சப்ளை இருக்காது என விரிவாக பார்க்கலாம்.
காமாட்சிபுரம் (போடி வட்டம்) : துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
பெரியகுளம் (கோவை வட்டம்): தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
வருசநாடு (கடமலைகுண்டு - மயிலாடும்பாறை வட்டம்): ஆத்தங்கரைப்பட்டி, வருசநாடு, குமணந்தொழு, அருகுவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்





















