மேலும் அறிய

கீழடியில் விறுவிறுப்பாக நடைபெறும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்..!

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மொழியின் பழமையும், தமிழர்களின் உலகிற்கு பறை சாற்றும் விதமாக கீழடி அகழாய்வும், அந்த ஆய்வின் மூலம் கிடைத்த பழங்கால பொருட்களும் உலகிற்கு வெளிகாட்டியுள்ளன. இந்த நிலையில், கீழடியில் அடுத்தடுத்த கட்டங்களாக 6 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்த அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட காரணத்தினால் தற்போது மீண்டும் கீழடியில் அகழாய்வு பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.


கீழடியில் விறுவிறுப்பாக நடைபெறும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று அகழாய்வு பணிகளையும், அகழாய்வில் கிடைத்த பொருட்களையும் நேரில் ஆய்வு செய்தனர். இந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகளில் கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் பழமையான ஈமக்காடு கண்டறியப்பட்டு, அங்கு இறந்தவர்களின் எலும்புகள், அவர்கள் வாழும்போது பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அகரம், மணலூர் மற்றும் கீழடியில் பண்டைய தமிழர்கள் காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமானவை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணியில் தொல்லியல் துறையினருடன் இணைந்து பணியாட்களாக அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கீழடியில் விறுவிறுப்பாக நடைபெறும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்..!

கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கீழடியில்  நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் மிகவும் தொன்மையானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கீழடியில் கிடைத்த பண்டைய பொருட்களை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்வதற்காக அருங்காட்சியகம் ரூபாய் 12 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில வாரங்களுக்கு கீழடி அருங்காட்சியகத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், ரூபாய் 8 கோடி மதிப்பில் திருமலை நாயக்கர் அரண்மனை புதுப்பிக்கப்படும் என்று  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget