மேலும் அறிய

கீழடியில் விறுவிறுப்பாக நடைபெறும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்..!

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மொழியின் பழமையும், தமிழர்களின் உலகிற்கு பறை சாற்றும் விதமாக கீழடி அகழாய்வும், அந்த ஆய்வின் மூலம் கிடைத்த பழங்கால பொருட்களும் உலகிற்கு வெளிகாட்டியுள்ளன. இந்த நிலையில், கீழடியில் அடுத்தடுத்த கட்டங்களாக 6 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்த அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட காரணத்தினால் தற்போது மீண்டும் கீழடியில் அகழாய்வு பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.


கீழடியில் விறுவிறுப்பாக நடைபெறும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று அகழாய்வு பணிகளையும், அகழாய்வில் கிடைத்த பொருட்களையும் நேரில் ஆய்வு செய்தனர். இந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகளில் கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் பழமையான ஈமக்காடு கண்டறியப்பட்டு, அங்கு இறந்தவர்களின் எலும்புகள், அவர்கள் வாழும்போது பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அகரம், மணலூர் மற்றும் கீழடியில் பண்டைய தமிழர்கள் காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமானவை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணியில் தொல்லியல் துறையினருடன் இணைந்து பணியாட்களாக அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கீழடியில் விறுவிறுப்பாக நடைபெறும் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்..!

கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கீழடியில்  நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் மிகவும் தொன்மையானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கீழடியில் கிடைத்த பண்டைய பொருட்களை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்வதற்காக அருங்காட்சியகம் ரூபாய் 12 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில வாரங்களுக்கு கீழடி அருங்காட்சியகத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், ரூபாய் 8 கோடி மதிப்பில் திருமலை நாயக்கர் அரண்மனை புதுப்பிக்கப்படும் என்று  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget