மேலும் அறிய

ராமநாதபுரத்தில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த பெரியப்பா கைது - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

’’சிறுமிக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சிறுமியின் தாய் அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார்’’

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கரையூர்  மீனவ கிராமத்தில் சிறுமிக்க பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் பெரியப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமேஸ்வரம் கரையூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அதே மீனவ கிராமத்தில் ஆறுமுகத்தின் மனைவியின் தங்கை குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று  காலை ஆறுமுகம் தனது மனைவியின் தங்கை வீட்டிற்கு  வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஆறுமுகத்தின் மனைவியின் தங்கை (கொழுந்தியாள்) மகன் மற்றும் மகள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி மற்றும் சிறுவனிடம் ஆறுமுகம் தனது  வீட்டில் பனை கொட்டை மற்றும் விளையாட்டுப்பொருட்கள் நிறைய  உள்ளது அதனை எடுத்து கொண்டு வந்து உங்கள் வீட்டில் போட்டு விளையாடுங்கள் என கூறி அழைத்து சென்றுள்ளார்.


ராமநாதபுரத்தில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த பெரியப்பா கைது - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

முதலில் அந்த சிறுவனிடம்  பனங்கொட்டையை  கொடுத்துவிட்டு விட்டு பின் அந்த சிறுமியை  வீட்டுக்குள் அழைத்து சென்று கதவை பூட்டி கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் சிறுமியின் தாய் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று  வீட்டின் கதவை திறக்கும் போது சிறுமிக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, இதுகுறித்து சிறுமியின் தாய் ராமேஸ்வரம் அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு தனது பெரியப்பாவே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கரையூர் மீனவ கிராம மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த பெரியப்பா கைது - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

சமீப காலமாக இளம் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், வசிப்பிடம் அருகே, பயணிக்கும் வாகனம் என பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்க படுகின்றனர். பெரும்பாலும் தெரிந்த நபர்களாலும் மற்றும் அவர்களின் உறவினர்களாலுமே பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். இதில், 18 வயதுக்கு குறைவான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கைதாகும் நபர்கள் மீது ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்- POCSO)-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப் படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. மாநகர காவல்துறையில் கூடுதல் துணை ஆணையர் தலைமையிலும், மாவட்ட காவல்துறையில் கூடுதல் எஸ்.பி தலைமையிலும் ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு’ உள்ளது. மானபங்கம், பாலியல் தொல்லை, சில்மிஷம், பலாத்காரம் போன்றவை தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விசாரிக்கப் படுகிறது. இருப்பினும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. எனவே, சிறுமிகளுக்கு இழைக்கப்படும்  கொடுமைகளுக்கு  எதிராக இதைவிட தண்டனைகள் அதிகமாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget