மேலும் அறிய

பழனி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள் 2வது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் போராட்டம் - காரணம் என்ன..?

நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், நாளை பக்தர்கள் மொட்டை அடிக்க முடியாமல் அவதியடைய வாய்ப்புள்ளது.  

பழனி முருகன் கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள், உதவி ஆணையர் லட்சுமி அவமரியாதையாக பேசியதாக கூறி அவரை கண்டிக்கும் விதமாக இரண்டாவது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் பணியாற்றி வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவிடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதற்கென கோவில் நிர்வாகம் சார்பில் சரவணப் பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடிமண்டபம் , மின் இழுவை ரயில் முடிமண்டபம், தண்டபாணி நிலையம் உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை செலுத்தலாம். இங்கு 330 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். உரிமம் அடிப்படையில் வேலை செய்து வருவதால் இவர்களுக்கு நிரந்தரமான மாத ஊதியம் என்பது கிடையாது, இவர்களுக்கு தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒரு பணியாளருக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.


பழனி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள் 2வது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் போராட்டம் - காரணம் என்ன..?

இதன் அடிப்படையில், காணிக்கை செலுத்தும் இலவச  டிக்கெட்டுகளில் 30 ரூபாய் பங்கு வீதம் மாதம் தோறும் சீட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து இவர்களுக்கு பங்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.  இந்நிலையில் பக்தர்களிடம் முடி காணிக்கை செலுத்துவதற்கு பணம் பெறக்கூடாது என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பெற்றதாக புகாரின் அடிப்படையில் உதவியாளர் லட்சுமி இருவரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து கடந்த 15 நாட்கள் பின்பு இரு தொழிலாளர்கள் உதவி ஆணையர் லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு பணியில் சேர்வதற்கு கோரியுள்ளனர்.


பழனி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள் 2வது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் போராட்டம் - காரணம் என்ன..?

அப்போது தங்களது மனைவிகளை அழைத்து வந்தால் மட்டுமே பணி தருவேன் என்று கூறியுள்ளார், இதனை அடுத்து கோவில் பணியாளர் தமிழ்செல்வன் மற்றும் குமரேசன் உதவி  ஆணையரை சந்திக்க மனைவிகளை அழைத்துச் சென்றபோது, தங்களுடைய கணவர்களை தினமும்  திருடுவதற்கு அனுப்பி விட்டீர்களா என்றும் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள், இந்த காசை வைத்து எப்படி பிழைக்கறீர்கள் என்றும்  நல்லா இருக்க மாட்டீர்கள் நாசமாய் போவீர்கள் என்றும் தொடர்ந்து அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் கண்ணீருடன் ஊழியர்கள் வெளியே வந்துள்ளனர். இதனை அடுத்து முடி காணிக்கை செலுத்தும் தொழிலாளர்கள் நேற்று  உதவி ஆணையர் லட்சுமியை கண்டிக்கும் விதமாக கண்டன  பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட்டு கொண்டு நூதன முறையில் பணி செய்து கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பழனி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள் 2வது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் போராட்டம் - காரணம் என்ன..?

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட நேற்று  வராததால், இன்றும் உதவி ஆணையர் லட்சுமியை கண்டித்து கண்டன பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், நாளை பக்தர்கள் மொட்டை அடிக்க முடியாமல் அவதியடைய வாய்ப்புள்ளது.  மேலும் உதவியாளர் லட்சுமி கடந்த சில நாட்கள் முன்பு கோழி சேவல் விடுவதில் சர்ச்சையிலும் , அதே போல சாலையோர வியாபாரி பெண்ணை  தாலிச் சங்கிலி பிடித்து இழுத்தும், பல்வேறு சர்ச்சைகள் சிக்கி உள்ள நிலையில் மீண்டும் கோவில் முடி எடுக்கும் தொழிலாளர் மனைவியை தர குறைவாக பேசி உள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தரிசனம் !
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தரிசனம் !
வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள் கவனத்திற்கு.. கசப்பான சம்பவங்கள் நடைபெற்றால் ரூ.1லட்சம் !
வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள் கவனத்திற்கு.. கசப்பான சம்பவங்கள் நடைபெற்றால் ரூ.1லட்சம் !
ஏழாம் ஆண்டாக அன்னதானம்.. வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நெகிழ்ச்சி !
ஏழாம் ஆண்டாக அன்னதானம்.. வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நெகிழ்ச்சி !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
Embed widget