மேலும் அறிய

திண்டுக்கல் | பாட்டில், பணம், தகராறு : மதுவெறியில், நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை..!

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டாக சேர்ந்து மதுபானம் அருந்திய நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி படுகொலை. ஒருவர் கவலைக்கிடம். டாஸ்மாக் கடைகள் திறந்த சில தினங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி அடுத்துள்ள சங்கணம்பட்டி மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கருப்பையா, கங்காதரன் சிரஞ்சீவி ,முருகேசன், மற்றொருவரும் முருகேசன் இவர்கள் அனைவரும் ஒன்றாக அப்பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வருகின்றனர். திண்டுக்கல் திருமலைக்கேணி சாலையில் உள்ள முத்தனம்பட்டி பகுதியின் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கி கூட்டாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.

திண்டுக்கல் | பாட்டில், பணம், தகராறு : மதுவெறியில், நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை..!

இந்நிலையில் மதுபானம் சற்று தீர்ந்தபோது மேலும்  மதுபானம் வாங்குவதற்கு தனித்தனியாக பணம் பங்கு போட வேண்டும் என்று பேசி பணம் பங்கீடு செய்ய செய்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் தகராறின்றி அவர்கள் பணத்தைப் பங்கீடு செய்து மீண்டும் மதுபானம் வாங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மீண்டும் மது அருந்தி உள்ளனர். மதியம் முதல் மாலை வரை மதுபானம் தொடர்ந்து மது அருந்திய அவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் சிரஞ்சீவி மற்றும் அவரது சகோதரர் முருகேசனும், கருப்பையா ,கங்காதரன் ஆகியோருக்கும் மது வாங்க பணம் கொடுப்பது தொடர்பாக திடீரென இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் தகராறாக முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் சிரஞ்சீவி அவரின் சகோதரர் முருகேசன் மற்றொரு முருகேசன் ஆகியோர் சேர்ந்து கருப்பையா மற்றும் கங்காதரனை கத்தியால் குத்தியதில் கருப்பையா படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் | பாட்டில், பணம், தகராறு : மதுவெறியில், நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை..!

இந்நிலையில் அருகே இருந்தவர்கள் கருப்பையாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதில் காயமடைந்த கங்காதரன் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திய சிரஞ்சீவி அவரது சகோதரர் முருகேசனும் மற்றொரு முருகேசனும் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடினர். சம்பவம் அறிந்த திண்டுக்கல் போலிசார் கத்தியால் குத்திய மூவரையும்  கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் | பாட்டில், பணம், தகராறு : மதுவெறியில், நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை..!

கைது செய்யப்பட்ட மூவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய நபர்கள் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் மதுபானம் அருந்துவதற்கு கூட்டாக சேர்ந்து மது அருந்தும் போது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவருகிறது. ஊரடங்கு உத்தரவுகளில் கடந்த 1 மாதமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் எந்த வித அசம்பாவிதங்கள் நடக்காதவண்ணம் இருந்த நிலையில் டாஸ்மாக் கடை திறந்த ஒரு சில தினங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத சம்பவங்களும், கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget