மேலும் அறிய

5 கோடி பணத்தை இரட்டிப்பாக்கவே காரைக்குடி வந்தோம்- பணம் பிடிப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்...!

5 கோடி ரூபாயை இரட்டிப்பாக்கி தருவதாக நம்ப வைத்து, சூரிய கிஷோர் தன்னை காரைக்குடிக்கு அழைத்து வந்ததாகவும், இங்கிருக்கும் நண்பர்களை வைத்து பணத்தை பறிமுதல் செய்ய திட்டமிட்டதாகவும் புகார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம், குன்றக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரைக்குடி - குன்றக்குடி செல்லும் சாலையில் ராஜீவ்காந்தி நகர் அருகே கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி  சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு கார்களை மறித்து அவ்வழியாக ரோந்து சென்ற சார்பு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.  அதில் ராஜ்குமார். மணிகண்டன். சேலம் மாவட்டம் குமார், சண்முக ஆனந்த், கோயம்புத்தூர் மாவட்டம் காமராஜ் திருச்சி மாவட்டம் மற்றும் சூரியகிஷோர் சென்னையைச் சேர்ந்தவர்கள்  என்பது தெரிய வந்தது.

காரைக்குடியில் நிற்காமல் தப்பிச்சென்ற காரில் 5 கோடி ரூபாய் பிடிபட்டது...!

மேலும் மேற்படி கார்களை தணிக்கை செய்ததில் இருவாகனங்களிலும் சீட்டுக்கு பின்புறம் ஜவுளிக்கடை பைகள் மற்றும் பேக்கில் 500 மற்றும் 2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 பேரிடமும் போலிசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பையில் சுமார் 5 கோடி பணம் இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் ராஜ்குமார் என்பவர் சேலத்தில் சிக்ஸ் சிக்மா ரெடி மிக்ஸ் கன்சர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் வைத்திருந்ததாகவும் காரைக்குடி அருகே நிலம் விலைக்கு வாங்க வந்ததாகவும் அங்கிருந்த நபர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்றும் ஒருவர் புரோக்கர் என்றும் மற்றவர்கள் அவர்களுக்குத் துணையாக வந்ததாக கூறினார்கள்.

காரைக்குடியில் காரில் சிக்கிய 5 கோடி பணம்- நிலம் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்டதா?

பின்னர் காரைக்குடி வருமான வரித்துறை அலுவலர் மகேஸ்வரி என்பவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு மதுரை மண்டல வருமான வரித்துறை இயக்குநர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். குன்றக்குடி காவல்நிலைய ஆய்வாளர் தேவகி இப்பணம் சம்மந்தமாக மேல்நடவடிக்கை எடுக்க ஒரு அறிக்கை அளித்ததின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் 10 பைகளில் இருந்த பணத்தை கைப்பற்றினர். பின்பு ஸ்டாலின் வருமான வரித்துறை துணை இயக்குநர் தலைமையில், பணத்தின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர் முன்னிலையில் இரண்டு பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டதில் ரூபாய் 4 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் அனுப்பிய தனி அறிக்கையின் பேரில் பணத்தையும் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர்களையும் காரைக்குடியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுனர்.


5 கோடி பணத்தை இரட்டிப்பாக்கவே காரைக்குடி வந்தோம்- பணம் பிடிப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்...!

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது,  இந்நிலையில் பணத்தின் உரிமையாளரான சேலத்தை சேர்ந்த ராஜ்குமார், தன்னிடமிருந்த 5 கோடி ரூபாயை இரட்டிப்பாக்கி தருவதாக நம்ப வைத்து, சென்னையை சேர்ந்த சூரிய கிஷோர் தன்னை காரைக்குடிக்கு அழைத்து வந்ததாகவும், காரைக்குடியில் இருக்கும் தனது நண்பர்களை வைத்து பணத்தை பறிமுதல் செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ராஜ்குமாரிடம் புகாரை பெற்ற குன்றக்குடி காவல் நிலையத்தினர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ராஜ்குமாரை ஏமாற்றி அழைத்து வந்த சென்னையை சேர்ந்த சூரியகிஷோர், காரைக்குடியைச் சேர்ந்த ரோஷன் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மற்றும் உடந்தையாக இருந்த சில நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்போகும் மதுரை - முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget