மேலும் அறிய

நாகர்கோவில் : எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு.. என்ன நடந்தது?

அரசுத்தரப்பில், 2.4 ஏக்கர் நிலம் உள்ளது எனவே குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு போதுமான இடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில்  அறங்காவலர் நியமனத்திற்கு  தொடர்பான அறிவிப்பாணைக்கு  தடை  கோரிய வழக்கு.

அதே கோரிக்கையுடன் உள்ள மற்ற வழக்குகளோடு விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

திருநெல்வேலியை சேர்ந்த பெருமாள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் கடந்த 9.12.21அன்று வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பில்  இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தின் மூலம்  விண்ணப்பங்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விண்ணப்பத்தில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு  விண்ணப்பிப்பதற்கான தகுதி, ஒவ்வொரு கோவிலிலும் எத்தனை அறங்காவலர்கள் பணியிடங்கள் உள்ளன?எவ்வாறு  தேர்வு செய்யப்பட உள்ளனர்? போன்ற தேவையான தகவல்கள் எதுவும் இல்லை. பொதுவாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளனர்.  இந்த முறையில் அறங்காவலர் குழு தேர்வு நடந்தால்,   இலகுவாக விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வெளிப்படைத்தன்மையுடன் நியமனம் நடைபெற வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கோவில்களில் நிர்வாகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் நிர்வாகத்தின் தலைமையில் இருப்பவர்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். 

இதுபோல் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை . எனவே இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு 09.12.21 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பாணைக்கு  இடைக்காலத் தடை விதிப்பதோடு, அறிவிப்பாணையை ரத்து செய்தும், போதிய விவரங்களுடன் புதிதாக. அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய்,  கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அரசுத்தரப்பில்,  இது போன்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும்,அதோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.அதையேற்ற நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கோடு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.


நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு.
 
பள்ளியில் 2.4 ஏக்கர் நிலம் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
 
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரைச்சேர்ந்த வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 
 
அதில், "நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பெண்கள் உயர்நிலைப் பள்ளியானது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தொடங்கப்பட்ட பழமையான பள்ளி. கல்வி மற்றும் விளையாட்டில் இந்த பள்ளி சிறந்து விளங்குவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் இங்கு வந்து படிக்கின்றனர்.நகரின் மையப்பகுதியில் 4.2 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்திருந்தது. இங்கு பெரிய மைதானம் இருந்தது. இந்தநிலையில் அந்த மைதானத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,  மாவட்ட கல்வி அலுவலகம், தண்ணீர் தொட்டி போன்றவை கட்டப்பட்டன.இதனால், தற்போது இந்த பள்ளி வெறும் 50 சென்ட் நிலத்தில் தான் இயங்கி வருகிறது. பள்ளியின் இடம் சுருங்கியதால் இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
 
இதுமட்டுமல்லாமல் இந்த பள்ளி மைதானத்தில் அரசு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் ஆகியவற்றை கட்டுவதற்கான முயற்சிகள் தற்போது நடக்கின்றன. அந்த கட்டிடங்கள்  கட்டப்பட்டால் பள்ளியில் படிப்பவர்களின் கல்வி மற்றும் உடற்கல்வி மிகவும் பாதிக்கப்படும். இது அடிப்படை உரிமையை பறிப்பதாக அமையும்.எனவே நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில், 2.4 ஏக்கர் நிலம் உள்ளது எனவே குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு போதுமான இடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!
மதுரை 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!
கம்யூட்டர், லேப்டாப், சேர், ஏசி என எதையும் விடாதீங்க... மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சியில் பணியாளர்கள் !
கம்யூட்டர், லேப்டாப், சேர், ஏசி என எதையும் விடாதீங்க... மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சியில் பணியாளர்கள் !
விருதுநகர் அருங்காட்சியகத்தில் ஓவிய-சிற்பக் கண்காட்சி, பயிற்சி: கலைஞர்களுக்குப் பரிசுகளுடன் அரிய வாய்ப்பு!
விருதுநகர் அருங்காட்சியகத்தில் ஓவிய-சிற்பக் கண்காட்சி, பயிற்சி: கலைஞர்களுக்குப் பரிசுகளுடன் அரிய வாய்ப்பு!
மதுரை மக்களுக்கு நாளை (20.06.2026) தலைவலி... ஏகப்பட்ட இடத்தில் மின்தடை ஏற்படவுள்ளது !
மதுரை மக்களுக்கு நாளை (20.06.2026) தலைவலி... ஏகப்பட்ட இடத்தில் மின்தடை ஏற்படவுள்ளது !

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
Embed widget