மேலும் அறிய

1000 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்களை சேகரித்துள்ள ராமநாதபுரம் விவசாயி!

’’1893 இல் வெளியான அரையணா, ஒரு அணா, 1745 மன்னார் கால நாணயம் தவிர நெதர்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களையும் அதிகளவு சேகரித்து உள்ளார்’’

உங்களிடம் பழைய நாணயங்கள் இருக்கிறதா? அப்படி என்றால் நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்.,  என்று சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்களை கண்டு ஒரு சிலர்  பழங்காலத்து நாணயங்களை சேகரித்து நாமும் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் நாணயங்கள் சேகரிப்பதுண்டு. ஆனால் இங்கே  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நாணயங்களை கூட தன் சொந்த பணத்தை செலவு செய்து ஆர்வத்துடன்  சேகரித்து வருகிறார். நாணயச் சேகரிப்பு என்பதை ஒரு கலையாகக் கருதிச் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார். பொதுவாக கிடைக்கக்கூடிய உள்நாட்டு எல்லா வகையான நாணயங்களிலும் சிலவற்றை மட்டும் சேகரிக்கலாம், ஆனால் இவரோ உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு நாணயங்களையும்  சேகரித்துள்ளார்.


1000 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்களை சேகரித்துள்ள ராமநாதபுரம் விவசாயி!

ராமநாதபுரம் அருகே உள்ள புல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முனியராஜ். இவர் எட்டாம்  வகுப்பு வரை மட்டுமே  படித்துள்ளார். வானம் பார்த்த பூமியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கிறது வயலை நம்பி இவரது வாழ்க்கை செல்கிறது. இருந்தும் நாணயங்கள் சேகரிப்பதில்  அதிக நாட்டம் உள்ளவராக இருக்கிறார். சிறு வயதிலிருந்தே பழங்கால பண்டைய தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் நாணயங்களை சேகரிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 1087 இல் உருவாக்கப்பட்ட 'பணம் ஒன்று' என்ற நாணயம் உள்ளது. இதேபோல் 600 முதல் 700 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர் காலத்து நாணயங்கள்  வெள்ளி நாணயங்கள்,  பல வெளிநாட்டு நாணயங்கள் என இவரிடம் 600க்கும் மேற்பட்ட நாணயங்கள் உள்ளன.


1000 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்களை சேகரித்துள்ள ராமநாதபுரம் விவசாயி!

இவரிடம் 1893 இல் வெளியான அரையணா, ஒரு அணா, 1745 மன்னார் கால நாணயம் தவிர நெதர்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களையும் அதிகளவு சேகரித்து உள்ளார். சிறு வயதில் இருந்தே நாணயங்கள் சேகரிப்பதில் உள்ள  ஆர்வத்தால்  விவசாயி முனியராஜ், கீழே எங்கு ஒரு நாணயம் கிடந்தாலும் எடுத்து சேகரித்து, குறிப்பாக அண்டை மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி, காளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மன்னர்கள் வணிகர்கள் வர்த்தகம் செய்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளதாள் அங்குள்ள பழங்கால வீடுகளை வீட்டின் உரிமையாளர்கள் இடிப்பதாக தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு சென்று வீட்டில் இடிபாடுகளில் இருந்து ஏதாவது பழைய காலத்து நாணயங்கள்; கிடைத்தால் அதனை  சேகரித்து வைத்து கொள்வார். அதே போல் விருதுகர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ங்களிலும் சென்று நாணயங்கள் சேகரித்துள்ளார்.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்களை சேகரித்துள்ள ராமநாதபுரம் விவசாயி!

இது வரை  நாணயங்களை சேகரிப்பதற்காக விவசாயி முனியராஜ் ரூபாய் 50 ஆயிரம் மேல் செலவு செய்துள்ளார். இவருக்கு கிடைக்கு பழங்கால நாணயங்கள் குறித்த தகவல் தெரிந்து கொள்ள ராமநாதபுரத்தில் உள்ள நூலகத்தில் வாசகராக சேர்ந்து பழங்கால நாணயங்கள் தொடர்பான புத்தகளை படித்து நாணயத்தின் வரலாறு குறித்த தெரிந்து கொள்கிறார். இப்போது கூடுதலாக அஞ்சல்தலைகள் பேனாக்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆயிரம் வகையான பேனாக்களை சேகரித்து வைத்துள்ளார். விவசாயி விவசாயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தும் இந்த காலத்தில் அதில் இருந்து சற்றும் விலகி பழங்கால நாணயங்கள் மற்றம் அதன் வரலாறு உள்ளிட்டவைகளை தேடி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த விவசாயிடம் இன்று நூற்றுக்கணகான வரலாற்று நாணயங்கள் உள்ளது என்பது ஆச்சரியத்திற்குறியதே.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget