மேலும் அறிய

Mullai Periyar Dam: முல்லை பெரியாறு அணை கட்ட முதல் அடிக்கல் நடப்பட்ட நாள் இன்று.. வாங்க வரலாறு தெரிஞ்சிப்போம்

முல்லை பெரியார் அணைக்கட்டும் வேலைக்கான முதல் கல்லை 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 இல் பென்னிகுவிக் என்று எடுத்து வைத்த முதல் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

1886 அக்டோபர் 29ஆம் தேதி பெரியார் அணை குறித்த ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானமும், சென்னை ராஜாதானியும் உடன்படிக்கை செய்து கொண்டனர். கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் உள்ள இடம்.  வனவிலங்குகள் நிறைந்த வனம், நச்சுப் பாம்புகள், ஆண்டின் பெரும்பகுதியாக ஓயாமல் பெய்யும் மழை என பல இடையூறுகள் ஏற்பட்டதால் 1887 செப்டம்பர் 21 இல் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை பென்னிகுவிக் இதே தினத்தில் எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அணைக்கான கட்டுமான பணிகள் நடந்தன மழைக்காலத்தில் அங்கு கட்டப்பட்ட அடித்தள பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அணைகட்டும் பணியை தொடர வேண்டாம் என ஆங்கிலேய அரசு பென்னிகுவிக்கிற்கு உத்தரவிட்டது.


Mullai Periyar Dam: முல்லை பெரியாறு அணை கட்ட முதல் அடிக்கல் நடப்பட்ட நாள் இன்று.. வாங்க வரலாறு தெரிஞ்சிப்போம்

இதனால் இங்கிலாந்து சென்ற பென்னிகுவிக் அவருடைய வீட்டில் பெரும் நிலப்பரப்பையும் விற்று பணத்தை சேகரித்து இந்தியா வந்தார். பின் துணிச்சலுடன் ஒரு கோடை காலத்தின் தொடக்கத்தில் அணையை கட்டினார். அதன் பிறகு வந்த பருவ மழை அந்த அடித்தளத்தை தகர்க்கவில்லை. அதன் பிறகு மதராஸ் கவர்மெண்ட் அணைகட்ட பென்னிகுவிக்கிற்கு துணை நின்றது. இந்திய பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பதவிக்கு வந்த முதல் இந்தியரான ஏ வி ராமலிங்க ஐயர் மற்றொரு பொறியாளர்  ஏடி மெக்கன்சி இருவரும் பென்னிகுவித்துடன் பணியாற்றினார். ஏடி மெக்கன்சி எழுதிய ”ஹிஸ்டரி ஆப் தி பெரியார் ரிவார்ட் ப்ராஜெக்ட்” என்னும் நூலில் அணை கட்டியது குறித்தும் பென்னிகுவிக்கிறகு ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Mullai Periyar Dam: முல்லை பெரியாறு அணை கட்ட முதல் அடிக்கல் நடப்பட்ட நாள் இன்று.. வாங்க வரலாறு தெரிஞ்சிப்போம்

அதில் மணலும், சுண்ணாம்பும் கலந்து சுர்க்கிகளை உருவாக்கி சிறு சூளைகளில் வைத்து சுட்டெடுக்கப்பட்டது. நான்கு அங்குல சதுரத்தில் ஒரு அங்குல கணத்தில் உள்ள கற்கள் 3 பங்கு மணலும் இரண்டு பங்கு சுண்ணாம்பு ஒரு பங்கு சுர்க்கியும்  சேர்த்து கலவை தயாரிக்கப்பட்டது. கருங்கல்லை ஆறு அங்குல கணத்தில் உடைத்தெடுத்து அடுக்கி வைத்து சுர்க்கியும் கலவையும் உபயோகித்து அணை கட்டப்பட்டது. வெளியில் காணப்படுகின்ற கருங்கற்கள் கீழிருந்து 120 அடி உயரம் வரை சிமெண்ட் பூசப்பட்டுள்ளது. இறக்குமதி செய்த சிமெண்ட் தான் இதற்கு உபயோகப்படுத்தப்பட்டது. அணைக்கட்டும் இடத்திற்கு தேவையான பொருட்களையும் தேவையான உபகரணங்களையும் கொண்டு வர சாலையானது, நீர்வழி ,ரோப்வே, ரயில்வே முதலிய வழிகளை பயன்படுத்தினர்.  90 அடி நீளம் உள்ள தேக்கு மரங்களை வெட்டி யானைகள் மூலம் எடுத்து வரச் செய்து ரோப்வே உருவாக்கப்பட்டது. உருவாக்குவதற்கான தூண்கள் பதிக்கப்பட்டன.


Mullai Periyar Dam: முல்லை பெரியாறு அணை கட்ட முதல் அடிக்கல் நடப்பட்ட நாள் இன்று.. வாங்க வரலாறு தெரிஞ்சிப்போம்

மலையில் இருந்து தேக்கடி வரை ரோப்வே அமைத்து அதில் பக்கெட்டுகளை கட்டிவிட்டு சுண்ணாம்பு கட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. 90 அடி உயரத்தில் உள்ள ரோப்வேயின் தூண்களை பதித்து மிகவும் சிரமமான வேலையாக இருந்தது.  அணை கட்டுவதற்காக வெள்ளத்தை தடுத்து நிறுத்தியது என்பது சாகசம் நிறைந்த வேலையாய் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த நூலில்.  இவ்வளவு சிரமத்துடன் ஐந்தாயிரம் தொழிலாளர்களை தொடர்ந்து பணி செய்தனர் . இதனால் 1895இல் முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.

அன்றைய கணக்கின்படி பெரியார் அணைக்காக மொத்த ரூபாய் 81.30 லட்சம் செலவு செய்யப்பட்டது. மதராஸ் கவர்னர் வென்லாக் தலைமையில் 1895 அக்டோபர் 10ல் முல்லைப் பெரியார் அணை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அவர் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதம் என பெரியார் அணையை சிறப்பித்துள்ளார். அந்தப் பென்னிகுவிக் என்னும் மாமனிதனால் உருவாக்கப்பட்ட பெரியாறு அணை என்னும் அதிசயத்திற்கு அடித்தளம் கல் நடப்பட்ட  நாள் இன்று இதனை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மறக்காமல் தற்போதும் இந்நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Embed widget