மேலும் அறிய

Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?

Mullai Periyar Dam: முல்லை பெரியாறு அணை தமிழக மக்களின் குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை என்பது கேரளாவில் உள்ள பெரியாறு நதியின் மீது கட்டப்பட்ட ஒரு புவி ஈர்ப்பு விசை அணை ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஏலக்காய் மலைகளில், கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் கடல் மட்டத்திலிருந்து 881 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேய பொறியாளர் கர்னல்  ஜான் பென்னிகுவிக் அவர்களால் 1893ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும், தமிழகத்திற்கு கிழக்கு நோக்கி தண்ணீரை அனுப்பும் ஒப்பந்தத்தையும் பெற்றுத்தந்தார் பென்னிகுவிக். முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.


Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?

 நீர் தேக்கம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு படுகை முழுமையாக கேரளாவிற்குள் உள்ளது, இது மாநிலத்திற்குள் ஒரு நதியாக அமைகிறது. 40 ஆண்டுகளில் முதல்முறையாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நவம்பர் 21, 2014 அன்று 142 அடியை எட்டியது. கேரளாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்த்தேக்கம் ஆகஸ்ட் 15, 2018 அன்று அதன் அதிகபட்ச கொள்ளளவான 142 அடியை எட்டியது.

அணை கட்டப்பட்ட ஆண்டு

அணையின் கட்டுமானப் பணிகள் 1887 ஆம் ஆண்டு தொடங்கி 1893 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. 1886 அக்டோபரில் திருவிதாங்கூர் மகாராஜாவிற்கும் மாகாணத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, அணை கட்டுவதற்காக 8,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை 999 ஆண்டுகளுக்கும், 999 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விருப்பத்துடனும் இருந்தது. கேரளாவில் வெள்ளத்தை ஏற்படுத்திய பெரியார் நதியின் ஒரு பகுதியை, தமிழ்நாட்டின் வறட்சியால் பாதிக்கப்பட்ட வைகை நதிப் படுகைக்கு திருப்பிவிட இந்த அணை கட்டப்பட்டது. ஸ்காட்டிஷ் மேஜர் ஜான் பென்னிகுயிக் தலைமையில், இந்தத் திட்டம் தொடங்கியது.


Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?

குத்தகை ஒப்பந்தம்

அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பெரியாறு நீர்ப்பாசனப் செயற்திட்டத்தின் இந்தியாவிற்கான ஆங்கிலேய செயலாளருக்குமிடையே 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் அப்போதைய சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது. 24 ஆண்டுகளாக திருவிதாங்கூருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே நடைபெற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அந்த குத்தகை ஒப்புதலானது.


Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?

7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அணை கட்டவும், கட்டியபின் நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், மாநில செயலாளருக்கு அதிகாரமும், முழு உரிமையும், சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி அணையின் 155 அடி உயர நீர்த் தேக்கத்திற்கு 8000 ஏக்கர் நிலப்பரப்பும், அணை கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலப்பரமும் அளிக்கப்பட்டுள்ளது. நில வரியாக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 5 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆண்டுக்கு ருபாய் 40,000க்கு முல்லை பெரியார் அணையின் முழு நீரையும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அந்த ஒப்பந்தம்  அரசுக்கு அளித்துள்ளது.

1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூலை 1, 1949 இல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் ஒன்று சேர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஜனவரி 1, 1950 இல், திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அங்கீகாரம் பெற்றது.


Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?

நவம்பர் 1, 1956 இல் மலபார் மாநிலம், திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தெற்கு வட்டங்கள் நீங்கலான பகுதி, காசர்கோடு வட்டம், தெற்கு கனரா ஆகியவைகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஸ் அரசும் திருவிதாங்கூர் அரசரும் செய்துகொண்ட முந்தைய ஒப்பத்தம் செல்லுபடியாக தென்றும் அது புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு அறிவித்தது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க கேரள அரசால் 1958, 1960, 1969 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இறுதியாக 1970 இல் கேரள முதலமைச்சராக சி. அச்சுத மேனன் பொறுப்பிலிருந்தபோது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.


Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?

முல்லை பெரியாறு அணை கட்டுமானம்

முல்லைப் பெரியாறு அணை சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடையீர்ப்பு அணையாகும். பொதுவாக எடையீர்ப்பு அணைகளின் எடையும் ஈர்ப்பு விசையும் நீர்த்தேக்கப் பகுதியைத் தாங்கி, அவற்றை நிலைப்படுத்துகின்றன. இதன் ஒரு பகுதியான முதன்மை அணையின் அதிகபட்ச உயரம் 53.6 m (176 அடி), நீளம் 365.7 m (1,200 அடி). இதன் உச்சிப்பகுதி 3.6 m (12 அடி) அகலமும் அடிப்பகுதி 42.2 m (138 அடி) அகலமும் கொண்டது. இதன் நீர்த்தேக்கம் 443,230,000 m3 (359,332 acre⋅ft) கொள்ளளவு உடையது. இதில் 299,130,000 m3 (242,509 acre⋅ft) பயன்பாட்டில் உள்ளது. முல்லை பெரியார் அணையின் வரைபடம் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி கேரள வனத்துறையினர் வாகன நிறுத்தமாக பயன்படுத்த ஒதுக்கிய இடமான புத்தடி என்ற இடம் அணையின் நீர்பிடிப்பு இடமாகும். பல்வேறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் கம்பீரம் மாறாமல் இருந்து வரும் முல்லை பெரியாறு அணை தமிழக மக்களின் குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Minister Moorthy : ’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Minister Moorthy : ’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
Embed widget