மதுரை மாட்டுத்தாவணியில் அரசின் முத்திரை இல்லாத 200க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல்
”மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் அதிகளவு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும்” என்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்று காலை முதல் தொழிலாளர்கள் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இணை ஆணையாளர் சுப்ரமணியன் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையாளர் மெய்விழி செல்வி தலைமையில் 17 துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை மற்றும் பழ சந்தை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
#madurai | மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் தொழிலாளர் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. " Further reports to follow - @abpnadu " | @mducollector | @UpdatesMadurai | .... pic.twitter.com/7NYqIHPITy
— Arunchinna (@iamarunchinna) April 28, 2022


