மேலும் அறிய

தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்களின் கல்வியை தொடர மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2 கல்வி ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது.


தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கி மீண்டும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தேர்ச்சி பெற்ற போதிலும் மாணவ-மாணவிகள் பலர் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகளை கண்டறியும் பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஈடுபட்டனர். இதில் கடந்த காலங்களை விட அதிக அளவில் மாணவ-மாணவிகள் இடைநிறுத்தம் ஏற்பட்டதாக தெரியவந்தது.


தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

அவ்வாறு இடைநின்ற மாணவ-மாணவிகள் இருப்பிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் தேடிச் சென்று அவர்களின் கல்வியை மீண்டும் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு மேல்படிப்பு படிக்காமல் இருந்த மாணவ-மாணவிகளும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் விருப்பத்தின் பேரில் பிளஸ்-1 மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

ஆட்சியர்களின் நேரடி உதவியாளர் பணியிடங்களை குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பக் கோரிய வழக்கு தள்ளுபடி

வட்டாரம் வாரியாக, ஆண்டிப்பட்டியில் 248 பேர், போடியில் 253 பேர், சின்னமனூரில் 172 பேர், கம்பத்தில் 375 பேர், கடமலை-மயிலையில் 71 பேர், பெரியகுளத்தில் 273 பேர், தேனியில் 433 பேர், உத்தமபாளையத்தில் 304 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget