மேலும் அறிய

போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு உறுதி

இந்து சமய அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

மதுரை மாவட்டம் அழகர்கோயில் மலை  மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில்  புனரமைப்பு பணிகள் முடிவுற்று  குடமுழுக்கு  நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் கோயில் நிர்வாகிககள் கலந்து கொண்டனர்.  குடமுழுக்கு முன்னேற்பாடக கடந்த 9-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது.  அதனைத்தொடர்ந்து, பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க ராக்காயி அம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. 

போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு உறுதி
 
அதனை தொடர்த்து முருகனின் 6-வது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் 2.5 கோடி மதிப்பீட்டில் மூன்று உபயதாரர்கள் மூலம் வெள்ளிக்கதவுகள் பொறுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,” திருக்கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 3884 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் பக்தர்களுக்கு வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழமையான கோயில்களில் 100 கோடி ரூபாய் ஒதுக்கி தி.மு.க., அரசு திருப்பணிகளை செய்து வருகின்றது. திருக்கோயிலுக்கு நிலுவையில் இருந்த  ரூ.260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம். 

போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு உறுதி
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மீண்டப பணிகள் எவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்கப்படுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக செய்து முடிக்கப்படும். ஆலயங்களில் செல்போன் பயன்பாடு தடை குறித்து நீதிமன்ற உத்தரவை பொறுத்த வரையில், ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. இதேபோல தமிழகத்திலுள்ள 48 முதுநிலை ஆலயங்களில் செயல்படுத்தப்பட்டு முதலில் திருச்செந்தூரில் அமல்படுத்தப்படும்.  கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அய்யர்மலை, சோழிங்கர் உள்ளிட்ட இடங்களில் மலைக்கோயில்களில் ரோப்கார் சேவையை ஏனோ தானோ என செய்தனர். தி.மு.க., பொறுப்பேற்று முறையாக நிதி ஒதுக்கப்பட்டு மலைக்கோயில்களில் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றது.  திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கண்ணகி கோயிலில் பணிகள் நடைபெற்று வருகிறது.

போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு உறுதி
சில மலைக்கோயில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன்  கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார். போலிச் சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்த கேள்விக்கு, வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என கூறாமல் தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.  மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என கோயில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் அவர்களிடமே ஒப்படைக்கப்படும். தி.மு.க., அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget