மேலும் அறிய

’நான் ஜெயலலிதா - சோபன்பாவுவின் மகள்; வாரிசு சான்றிதழ் கொடுங்க’ : பரபரப்பை ஏற்படுத்திய மதுரை பெண்

மதுரை தாலுகா அலுவலகத்தில், தான் ஜெயலலிதாவின் வாரிசு  எனக் கூறி, தனக்கு வாரிசு சான்றிதழ் கொடுங்க என துணை தாசில்தாரிடம் ஒரு பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை தாலுகா அலுவலகத்தில், தான் ஜெயலலிதாவின் வாரிசு  எனக் கூறி, வாரிசு சான்றிதழ் கொடுங்க என துணை தாசில்தாரிடம் ஒரு பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை, டிஆர்ஓ காலனி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி மீனாட்சி (38). இவர் தனது தந்தை சோபன்பாபு, தாய் ஜெயலலிதா என்றும், சென்னை போயஸ் தோட்டத்தில் வசித்து வந்த தன் தாய் இறந்துவிட்டதால், அவருடைய வாரிசான எனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமென ஆன்லைன் மூலம் கடந்த ஜன. 27ம் தேதி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தில், மீனாட்சியை பற்றிய ஆவணம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.  இதை கவனித்த மதுரை வடக்கு தாலுகா அதிகாரிகள் மனு மீது எந்த நடவடிக்கை எடுப்பது என்பதில் குழப்பமடைந்தனர்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆனதால், நேற்று மீனாட்சி மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த துணை தாசில்தார் ராஜலட்சுமியிடம் வாரிசு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு இறந்தவர் சென்னை என்பதால், அங்கு சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என துணை தாசில்தார் கூறி உள்ளார். இதனை ஏற்க மறுத்த மீனாட்சி, ‘‘எனது தந்தையும், தாயும் என்னை அனாதையாக விட்டுவிட்டு சென்றுள்ளனர். பழநியில் தங்கரதம் இழுக்கும் உரிமையை எனது தந்தை சோபன்பாபு எனக்கு வழங்கியுள்ளார். பழநியில் அதற்கான ஆவணங்களை பெற்றுள்ளேன். நான்தான் அவரின் வாரிசு. வாரிசு சான்றிதழ் கேட்டால் தர மறுக்கிறீர்களே?” என துணை தாசில்தாரிடம், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘நீதிமன்றம் சென்று சட்ட ரீதியிலாக கேட்டுப் பெறுங்கள்  எனக்கூறி துணை தாசில்தார் கூறினார்.

 மீனாட்சி கூறுகையில், ‘‘நான் சிறுவயதில் இருக்கும்போதே எனது தாய் என்னை விட்டு விட்டு சென்று விட்டார். பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்தேன். நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு. இதற்காக சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். 2 மாதத்திற்கு மேலாகியும், சான்றிதழ் தர மறுக்கின்றனர். தற்போது நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறு தாசில்தார் கூறுகிறார். இதற்காக எனது குடும்ப வழக்கறிஞரிடம் பேச உள்ளேன்’’ எனக்கூறி அழுதார். ஏற்கனவே ஜெயலலிதாவின் மகள் என்று கூறி இரண்டு பேர் சொல்லியிருந்தனர்.  இப்போது மூன்றாவதாக ஒருவர் தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Embed widget