மேலும் அறிய

மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு

கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கணவருடன் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் தங்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பதற வைக்கும் CCTV காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
 
மதுரையில் செயின் பறிப்பு
 
மதுரை திருமலைநாயக்கர் மஹால் அருகே உள்ள பந்தடி பகுதியைச் சேர்ந்தவர் துவாரகநாத் - மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இந்த நிலையில் கணவர் வாகனத்தை நிறுத்தி மனைவி வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்போது அவரை பின்தொடர்ந்து விலை உயர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முற்பட்டனர்.
 
 
மர்ம கும்பல் செயின் பறிப்பு
 
தனது கழுத்தில் மூனே முக்கால் பவுன் தங்க செயினை பறிக்க முயன்றதில் மஞ்சுளா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மஞ்சுளவை தர தர என சாலையில் இழுத்தவரே வாகனத்தில் வேகமாக இயக்கி சென்றனர். இதில் செயின் இரண்டாக உடைந்து ஒரு பகுதி கொள்ளையர்கள் கையிலும், மற்றொரு பாகம் மஞ்சுளா கழுத்திலும் இருந்தது. தற்போது இச்சம்பவத்தினுடைய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது கணவருடன் மாட்டுத்தாவணி கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டில் முன்பு வாகனத்தை நிறுத்தும்போது பின் தொடர்ந்த மர்ம கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலையுயர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார்.? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை கண்டறிந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது யார்? என்பது குறித்தும் தற்போது தெற்குவாசல் போலீசார் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.
 
சிறுவர்கள் திருட்டு
 
இதேபோல் மற்றொரு சிசிடிவி காட்சியில் பந்தடி 7 வது தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இரண்டு சிறார்கள் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து சாவகாசமாக வீட்டிலிருந்து வெளியே வரும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. அதில் சிசிடிவியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் இருந்த 3000 ரூபாய் பணம் திருடு போனதும் தெரிய வந்தது. மேலும், தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு கீழவாசல் மற்றும் தெற்கு மாசி வீதிகள் விளக்கத்துடன் ஆகிய பகுதிகளில் ஏராளமானூர் கடை அமைத்து இருப்பதால் இப்பகுதிகளில் ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
TVK: தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில்  ஆறுதல் கூறிய விஜய்
தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோMamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்Priyanka Gandhi  | ROAD Show-ல் காந்தி குடும்பம்?வரலாறு படைப்பாரா பிரியங்கா வாய்ப்பு தருமா வயநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
TVK: தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில்  ஆறுதல் கூறிய விஜய்
தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய விஜய்
PAK vs ENG: ராட்சத ஃபேன், ஹீட்டர்களால் ஆடுகளத்தை காய வைக்கும் பாகிஸ்தான்! காரணம் என்ன?
PAK vs ENG: ராட்சத ஃபேன், ஹீட்டர்களால் ஆடுகளத்தை காய வைக்கும் பாகிஸ்தான்! காரணம் என்ன?
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
STR 49: பழைய மாறி வந்த சிம்பு! எஸ்டிஆர் 49 படத்திற்காக ஸ்பென்சரில் வாங்கிய பொருட்கள் இத்தனையா?
STR 49: பழைய மாறி வந்த சிம்பு! எஸ்டிஆர் 49 படத்திற்காக ஸ்பென்சரில் வாங்கிய பொருட்கள் இத்தனையா?
Embed widget