மேலும் அறிய

தொடர்மழை: மதுரை கடச்சனேந்தல் கண்மாயில் சிக்கல்.. மீன்பிடி மோகம், நீர்வரத்து பாதிப்பு - அவசர நடவடிக்கை தேவை

யானைமலையை ஒட்டி சாரல் மழை பெய்த நிலையில் சாரல் மழையோடு யானை மலையை பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.

தொடர்மழை காரணமாக மதுரை கடச்சனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு - தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல்  - மீன்பிடிதளமாக மாறிவரும் கடச்சனேந்தல் கண்மாய்.

மதுரையில் தொடர் மழை
 
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் கண்மாய் கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வரண்டு காணப்பட்டன.  இதனிடையே கடந்த இரு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக கடச்சனேந்தல் கண்மாய்க்கு நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் முதல் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீரானது வரத்து கால்வாய் மூலமாக கடச்சனேந்தல் கண்மாய்க்கு செல்கிறது. இந்நிலையில் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்கள், தடுப்பு அணைகள் முழுவதும் மரம், செடிகளால் சூழ்ந்து தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் செல்லும் நிலை உள்ளது.
 
தூள்பறக்கம் மீன்பிடி
 
தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு அணைகளை மீன்பிடி தளமாக மாற்றி வருகின்றனர். கடச்சனேந்தல் பகுதியில் உள்ள சிறிய தடுப்பணைகளில் முழுவதுமாக மீன்வலையை விரித்து அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான முறையில் கட்லா, ரோக், சிலேபி, உளுவை, பொட்லா, கெண்டைமீன், கெளுத்தி மீன்களை பிடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மீன்களை வளர்ப்பதாக கூறி கண்மாயில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்ட நிலையிலும் அதனை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் வெளியேற முடியாமல் தவித்து வரும் நிலையில் மீன்களை பிடிப்பதற்காக வலைகளை பயன்படுத்துவது,  மீன் பத்தை அமைத்து தண்ணீரை தடுத்து வருவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றது. கடச்சனேந்தல் கண்மாய், மருதங்குளம் கண்மாய் ஆகியவற்றின் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல் மழை காரணமாக மதுரையில் பல இடங்களில் வானவில் தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மழையால் வந்த வானவில்
 
ஒத்தக்கடை பகுதியில் உள்ள யானைமலை என்பது மதுரையின் அடையாளமாக திகழ்ந்துவருகிறது. இந்நிலையில் யானைமலையை ஒட்டிய பகுதியில் திடீரென மழைக்கான சூழல் உருவான நிலையில் யானைமலையை ஒட்டி பெரிய அளவிலான வானவில் தோன்றியது. சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக வானவில் தோன்றி தென்பட்ட நிலையில் அதனை அப்பகுதி மக்கள் ஏராளமான பார்த்து ரசித்தனர். தொடர்ந்து சில நிமிடங்களில், யானைமலையை ஒட்டி சாரல் மழை பெய்த நிலையில் சாரல் மழையோடு யானை மலையை பார்த்து பொதுமக்கள் ரசித்தனர். யானைமலையின் கண்கொள்ளாகாட்சியை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget